மாணவர்களின் கழிவறை பயன்பாட்டை கண்காணிக்க Fingerprint Scanner - சர்ச்சையில் சிக்கிய பள்ளி

சிட்னியில் ஒரு பள்ளியில் மாணவர்கள் கழிவறை பயன்படுத்தும் நேரத்தை கண்காணிக்க Biometric ஸ்கேனர்களை பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Biometric Scanner
Biometric ScannerCanva
Published on

மாணவர்கள் கழிவறை பயன்படுத்துவதைக் கண்காணிக்க Fingerprint ஸ்கேனர் வைத்ததால் பள்ளி நிர்வாகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பள்ளி பருவத்தில் வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலோ, அல்லது கழிவறை பயன்படுத்த வேண்டும் என்றாலோ, ஆசிரியர்களிடம் அனுமதி பெற வேண்டும். சமயத்தில் அவர்கள் அனுமதி கொடுத்தாலும், பெரும்பாலும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது தான். இந்த முறையை மாற்றவேண்டும் என பல தரப்பட்ட கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Biometric Scanner
"iPadல சார்ஜ் கம்மியா இருக்கு" மாணவிக்கு Detention கொடுத்த பள்ளி

இப்படியிருக்கையில் சிட்னியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் கழிவறை பயன்படுத்தும் நேரத்தை கண்காணிக்க Biometric ஸ்கேனர்களை பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்திருக்கும் மூர்பேங் ஹை ஸ்கூலில் தான் இந்த ஸ்கேனர்களை வைத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் fingerprint ஸ்கேனர் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வரை 1000 மாணவர்களின் கைரேகைகளை இதில் பதிவு செய்துள்ளது பள்ளி. மாணவர்களின் பெற்றோர் இதனை ஒப்புக் கொண்டாலும், இணையவாசிகள், மற்ற பெற்றோர் இது மகிழ்ச்சியளிக்கக் கூடிய நடவடிக்கை அல்ல என தெரிவித்து வருகின்றனர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த கழிப்பறைகளை மறுசீரமைப்பு செய்த பின்னர் தான் பள்ளி இந்த முறையை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்புகளுக்கு பதிலளித்த பள்ளியின் முதல்வர் வேலி கிரெகோ, இது உண்மையில் மாணவர்களின் கைரேகையை பதிவு செய்துகொள்ளவில்லை. பதிலாக alphanumeric முறையில் இது மானவர்கள் கைரேகையை சேமித்து வைத்திருக்கும் என தெரிவித்தார்.

இது மாணவர்களை கண்காணிக்க எடுத்த முயற்சியே தவிர மற்றபடி இது பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இது கட்டாயமாக கடைப்பிடிக்கப் பட வேண்டிய முறை இல்லை எனவும் தெரிவித்தார் வேலி.

பள்ளி முதல்வரின் விளக்கத்திற்கு பிறகும் பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு இணையத்தில் கண்டனங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இது சற்று தீவிரமான, கவலைக்குரிய நடவடிக்கை என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.

Biometric Scanner
'சாவர்கர் பறவைகள் மீதேறி வந்தார்' - கர்நாடக பள்ளி பாடத்தால் சர்ச்சை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com