மேலே விமானம், கீழே கடற்கரை - இந்த அற்புத தலம் எங்கிருக்கிறது தெரியுமா?

கடற்கரையில் காற்று வாங்கும் போது தலைக்கு மேல் விமானம் பறப்பதை நினைத்துப்பார்க்கும் போதே வியப்பாக இருக்கிறதா? ஆனால் இந்த விமான நிலையம் உலகின் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
மேலே விமானம், கீழே கடற்கரை - இந்த அற்புத தலம் எங்கிருக்கிறது தெரியுமா?
மேலே விமானம், கீழே கடற்கரை - இந்த அற்புத தலம் எங்கிருக்கிறது தெரியுமா?Twitter

விமானங்களை வேடிக்கைப் பார்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது? சென்னை விமான நிலையமாகட்டும் மதுரையாகட்டும் எப்போதுமே வந்து செல்லும் விமானங்களைப் பார்வையிட ஒரு கூட்டம் நிற்கும்.

எவ்வளவு நெருங்கி நின்று பார்த்தாலும் இன்னும் கொஞ்சம் அருகில் இருந்து விமானத்தைப் பார்த்துவிட மாட்டோமா என குழந்தைத் தனமான ஏக்கம் இருக்கும்.

அப்படில்லாமல் விமானத்தை முழுவதுமாக பார்த்து ரசிக்க நாம் செல்ல வேண்டியது இந்த கடற்கரைக்குத் தான்.

ஆம், இந்த கடற்கரை விமானநிலையத்துக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் ராட்சத விமானங்களையும் ரசிக்கலாம், அதைவிட பெரிதான பரந்துவிரிந்த கடற்கரையும் ரசிக்கலாம்.

கடற்கரையில் காற்று வாங்கும் போது தலைக்கு மேல் விமானம் பறப்பதை நினைத்துப்பார்க்கும் போதே வியப்பாக இருக்கிறதா? ஆனால் இந்த விமான நிலையம் உலகின் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

செயின் மார்டின் நாட்டிலுள்ள பிரின்சஸ் ஜூலியானா விமான நிலையத்தை பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மகோ கடற்கரைக்கு மிக அருகில் விமான ஓடுதளம் இருப்பதனால் இது ஆபத்தானதாக கருதப்படுகிறது. விமானம் வேகமாக மேலே எழும்போது அருகாமையில் இருப்பவர்களை நிலைகுலையச் செல்லும்.

சில சமயங்களில் இது மனிதர்களை கீழே தள்ளியும் விட்டிருக்கிறது. இந்த கடற்கரையில் கவனமாக இல்லாவிட்டால் விமானம் தரும் அழுத்தத்தில் தண்ணீருக்குள் விழுந்துவிடுவீர்கள்.

மேலே விமானம், கீழே கடற்கரை - இந்த அற்புத தலம் எங்கிருக்கிறது தெரியுமா?
ஈரோட்டில் அமைந்திருக்கும் ’’இலங்கை தீவு” குறித்து தெரியுமா? சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

விமானம் பறக்கும் போது அதன் பெரிய உருவத்தை அன்னார்ந்து பார்ப்போம். அப்போது காதுகளைப் பொத்திக்கொள்வது அவசியம். அடிக்கடி விமானம் தரையிறங்கும் சத்தத்தை இவ்வளவு நெருக்கத்தில் கேட்பது செவி குறைப்பாட்டை ஏற்படுத்தலாம்.

மேலும் கடற்கரையின் மணல் மற்றும் கற்கள் பறப்பதும் பிரச்னையாக கருதப்படுகிறது. ஒரு பயணி விமான நிலையத்தின் வேலியை பிடித்துக்கொண்டிருக்கும் போது காயமடைந்திருக்கிறார்.

இந்த விமான நிலையத்தில் ஓடுதளம் மிகவும் நெருக்கமக இருப்பதனால் தரை இறங்குவதும், புறப்படுவதும் விமானிக்கு சவாலானது. அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் மட்டுமே இங்கு சிறப்பாக செயல்பட முடியும்.

அரிதாக ஒரு போயிங் 737 விமானம் கடல் தண்ணீரில் இறங்கியிருக்கிறது.

மேலே விமானம், கீழே கடற்கரை - இந்த அற்புத தலம் எங்கிருக்கிறது தெரியுமா?
ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வரும் ஆளில்லா தீவு - எங்கே? என்னென்ன வசதிகள் உள்ளன?

மகோ கடற்கரை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதனால் இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகின்றனர். ஆனால் இந்த ஆபத்தான விமான நிலையத்தைப் பற்றி தெரியாமல் வருவதனால் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.

மேலே விமானம், கீழே கடற்கரை - இந்த அற்புத தலம் எங்கிருக்கிறது தெரியுமா?
விஜயலக்ஷ்மி ரமணன்: மருத்துவர் டு இந்திய விமான படையின் முதல் பெண் அதிகாரி - இவரது கதை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com