சிரியா: நிலநடுக்கத்தில் பிறந்த 'அதிசய' குழந்தை - தத்தெடுத்து வளர்க்க குவியும் விண்ணபங்கள்

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவர் அங்கேயே குழந்தை பெற்றுள்ளார். அந்தக் குழந்தையின் தந்தையும் நான்கு உடன்பிறந்தவர்களும் இடிபாடுகளில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா: நிலநடுக்கத்தில் பிறந்த 'அதிசய' குழந்தை - தத்தெடுத்து வளர்க்க குவியும் விண்ணபங்கள்
சிரியா: நிலநடுக்கத்தில் பிறந்த 'அதிசய' குழந்தை - தத்தெடுத்து வளர்க்க குவியும் விண்ணபங்கள்Twitter

சிரியாவில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு நடுவே பிறந்த குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான தம்பதிகள் முன்வந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட நிலகநடுக்கம் பேரழிவை சந்திக்க வைத்தது. பல நகரங்கள் சுக்குநூறாக நொருங்கின.

இதன் இடிபாடுகள்கில் சிக்கிய மக்களை மீட்கும் பணி இன்னும் தொடர்கிறது. இதுவரை 21,000 பேருக்கும் மேலாக மரணமடைந்துள்ளனர். பலர் பலத்த காயத்துடன் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவர் அங்கேயே குழந்தை பெற்றுள்ளார். அந்தக் குழந்தையின் தந்தையும் நான்கு உடன்பிறந்தவர்களும் இடிபாடுகளில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.

சிரியா: நிலநடுக்கத்தில் பிறந்த 'அதிசய' குழந்தை - தத்தெடுத்து வளர்க்க குவியும் விண்ணபங்கள்
”இந்தியாவில் நிலநடுக்கம் வரும்” துருக்கி பூகம்பத்தை முன்பே கணித்த நபரின் அடுத்த ட்வீட்!

"திங்கள் கிழமை குழந்தை அழைத்துவரப்பட்டபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. வீக்கங்கள் மற்றும் புண்கள் இருந்தது. மூச்சுவிட சிரமப்படும் நிலையில் இருந்தது” என்று குழந்தையை கவனித்து வரும் குழந்தை மருத்துவர் ஹானி மரூஃப் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தையை ஐயா என்று அழைக்கின்றனர். இந்த அரபு வார்த்தைக்கு அதிசயம் என்றுப் பெயர்.

ஐயாவை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பலரும் ஐயா குறித்த விவரங்களைக் கேட்டு வருகின்றனர்.

சிரியா: நிலநடுக்கத்தில் பிறந்த 'அதிசய' குழந்தை - தத்தெடுத்து வளர்க்க குவியும் விண்ணபங்கள்
துருக்கி, சிரியா நிலநடுக்கம் : முன்பே கணித்தாரா இவர்? - விரிவான விளக்கம்

தொலைக்காட்சி பிரபலங்களும், சமூகத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்களும் கூட ஐயாவுக்கு நல்ல வாழ்க்கையை அளிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இப்போது குழந்தையை பார்த்துவரும் மருத்துவர் அட்டையா, "நான் குழந்தையை தத்தெடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன். அவரது உறவினர்கள் வரும் வரை என் குழந்தையாகவே வளர்க்கப் போகிறேன்" எனக் கூறியுள்ளார்.

அட்டையாவின் மனைவி குழந்தைக்கு தாய் பால் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா: நிலநடுக்கத்தில் பிறந்த 'அதிசய' குழந்தை - தத்தெடுத்து வளர்க்க குவியும் விண்ணபங்கள்
துருக்கி பூகம்பம்: எப்படி ஏற்பட்டது? இதுதான் உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கமா? Explained

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com