டாக்சிம்: உலகின் முதல் நாய்-நரி கலப்பின உயிரினம் - எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

பார்பதற்கு நாயை ஒத்ததாக இருந்தாலும் அது பணிவானதாக இல்லை. அதே நேரம் ஒரு காட்டு நாய் இனத்தைப் போன்ற மூர்கம் கொண்டதாகவும் இல்லை. இந்த விசித்திரமாண பிராணியின் மரபணுவைக் கண்டறிய தொடர் சோதனைகளை ஆராய்சியாளர்கள் மேற்கொண்டனர்.
டாக்சிம் : உலகின் முதல் நாய்-நரி கலப்பின உயிரினம் - எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
டாக்சிம் : உலகின் முதல் நாய்-நரி கலப்பின உயிரினம் - எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?Twitter
Published on

நாய் மற்றும் நரியை ஹைபிரீட் செய்து உருவாக்கப்பட்ட உயிரினம் பற்றித் தெரியுமா? உலகின் முதல் நாய்-நரி கலப்பின உயிரினம் பிரேசிலில் சமீபத்தில் கண்டரியப்பட்டது.

2021ம் ஆண்டு ஒரு கார் விபத்தின் போது வினோதமான நாய்க்குட்டியை கண்டறிந்தனர். பிரேசிலின் தென்கோடி மாநிலமான ரியோ கிராண்ட் டோ சொல்லில் உள்ள மருத்துவமனையில் அது சேர்க்கப்பட்டது.

ஒரு முழுமையான காட்டு விலங்காகவோ அல்லது வீட்டு விலங்காகவோ இல்லாத அதன் நடவடிக்கைகள் கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர்.

ஃபிளாவியா ஃபெராரி என்ற வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர், "அந்த கருப்பான புள்ளி காதுகளைக் கொண்ட உயிரினம் அசாதாரணமான குணாதிசயங்களை வெளிப்படுத்தியது." எனக் கூறியுள்ளார்.

பார்பதற்கு நாயை ஒத்ததாக இருந்தாலும் அது பணிவானதாக இல்லை. அதே நேரம் ஒரு காட்டு நாய் இனத்தைப் போன்ற மூர்கம் கொண்டதாகவும் இல்லை.

இந்த விசித்திரமாண பிராணியின் மரபணுவைக் கண்டறிய தொடர் சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அதன் முடிவுகள் கடந்த மாதம் அனிமல்ஸ் என்ற இதழில் வெளியானது.

டாக்சிம் : உலகின் முதல் நாய்-நரி கலப்பின உயிரினம் - எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
என்னது Spaceக்கு மீன் அனுப்பப்பட்டதா? மனிதனுக்கு முன் விண்வெளிக்கு சென்ற விலங்குகள்!

ஆராய்ச்சியின் படி அது பாம்பஸ் என்ற நரி இனம் (தென்னமெரிக்காவைச் சேர்ந்தது) மற்றும் இனம் தெரியாத நாய் வகையின் கலப்பினம் எனக் கண்டறிந்தனர்.

நாய் மற்றும் நரி கலப்பினத்தின் முதல் குறிப்பு இதுதான். இதற்கு டாக்சிம் என பெயரிட்டு அழைத்தனர். எதிர்பாராத விதமாக இந்த உயிரினம் மறைந்துவிட்டது.

இந்த நரி மனிதரால் கலப்பினம் செய்யப்பட்டதா அல்லது இயற்கையாக கலப்பினமானதா என்பது தெரியவில்லை. கோவேறு கழுதை மற்றும் லிகர் போன்ற உயிரினங்கள் மனிதனால் செய்யப்பட்ட கலப்பினம். மான்களில் எல்க் போன்றவை இயற்கையாக உருவான கலப்பினத்துக்கு எடுத்துக்காட்டு.

விலங்குகள் கலப்பினமாவது காடுகளுக்கு நல்லதல்ல. கலப்பினமான உயிரினங்கள் மூலமாக நோய் கிருமிகள் எளிதாக பரவக் கூடும் என்பது குரிப்பிடத்தக்கது.

டாக்சிம் : உலகின் முதல் நாய்-நரி கலப்பின உயிரினம் - எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com