கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன?

என்னென்ன உயிரினங்கள் கண்விழித்தவாறே உறங்குகின்றன? இதற்கான காரணம் என்ன?
கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன?
கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன?Canva
Published on

நாம் விலங்குகள் உறங்கி பார்த்திருப்போம். நாய், பூனை, பறவைகள் கூட கண்களை மூடியே தூங்கும். ஆனால் சில விலங்குகள், பறவைகள் கண்களை திறந்தவண்ணம் தூங்கும்.

பார்ப்பவர்களுக்கு இது விழித்துக்கொண்டிருப்பது போல இருக்கும். ஆந்தை, பாம்புகள் இந்த வகையில் நாம் சேர்க்கலாம். என்னென்ன உயிரினங்கள் கண்விழித்தவாறே உறங்குகின்றன? இதற்கான காரணம் என்ன?

ஏன் விலங்குகள் கண்விழித்தவாறு உறங்குகின்றன?

விலங்குகள் பெரும்பாலும் unihemispheric slow wave sleep இருப்பதனால் கண்களை திறந்துகொண்டு தூங்குகின்றன. இந்த unihemispheric slow wave sleep என்பது நமது மூளையின் ஒரு பாதி விழித்துக்கொண்டும், ஒரு பாதி ஓய்வில் இருப்பதையும் குறிக்கிறது.

பொதுவாக நாம் உறங்கும்போது இரு கண்களும் மூடி, மூளையின் இரண்டு பாதிகளுமே ஓய்வில் இருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவற்றின் மீது நமக்கு கவனம் இருக்காது.

ஆனால் மனிதர்களுக்கும் இந்த unihemispheric slow wave sleep நேரும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

விலங்குகள் இப்படி உறங்குவதால், அவற்றின் உடல் சில செயல்பாடுகளை மேற்கொள்ளவும், அதே சமயத்தில் சுற்றுச் சூழல் மீது கவனம் வைத்து தங்களை பாதுகாக்கவும் இது உதவுகிறது

பென்குயின்

ஹம்போல்ட் இன பென்குயின்கள் கண்களை திறந்தே உறங்குகின்றன. தங்களது குட்டிகளை கண்காணிக்க இவை இவ்வாறு உறங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை பென்குயின்கள் பெரும்பாலும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.

டால்பின்

பாட்டில்நோஸ் வகை டால்பின்களிடம் unihemispheric slow wave sleepஐ காணலாம். இப்படி உறங்குவது, டால்பின்கள் மூழ்கிவிடாமல் இருக்க உதவுவதாக கூறப்படுகிறது

கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன?
செயற்கை கருவறை : ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் - எப்படி சாத்தியம் இந்த அறிவியல் ஆச்சரியம்?

திமிங்கலங்கள்

திமிங்கலங்களும் இந்த unihemispheric slow wave sleepஐ மேற்கொள்கின்றன. இப்படி உறங்குவதால், விழித்திருக்கும் மூளையின் பாகம் நீர்வாழ் பாலூட்டிகளை சுவாசிக்க உதவுவதாக கூறுகின்றனர்

ஆந்தைகள்

இவை இரவு நேர உயிரினங்கள். ஆந்தைகள் கண்விழித்தவாறு உறங்குவது அவற்றை எதிரிகளிடம் இருந்து அவற்றை காக்கவும், தங்களின் இரையை கண்டறியவும் உதவுகிறது

கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன?
பூனை குறுக்கிடுவது முதல் கண்ணாடி உடைவது வரை - கெட்ட சகுனங்களுக்கு பின்னிருக்கும் அறிவியல்!

பாம்புகள்

பாம்புகளிடமும் இந்த வகையான உறக்கத்தை நாம் கவனித்திருப்போம். இதற்கு காரணம், பாம்புகளுக்கு கண்களில் இமைகள் இல்லை.

ஃபால்கன்

இந்த வகை பறவைகளுக்கு, அவற்றை விட பெரிய உயிரினமான ஆந்தை, கழுகுகள் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதனால் தங்களை காத்துக்கொள்ள கண்விழித்தவாறு தூங்குவதை நாம் பார்க்கிறோம்.

இந்த பட்டியலில் வாத்துகளும் உள்ளன.

கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன?
'அடங்காத ஆண்கள்' பறவைகளுக்கும் விவாகரத்து நடக்குமாம் - அறிவியல் சொல்லும் காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com