டைட்டானிக் கப்பலை காண சென்ற 5 பேர் பலி - நீர்மூழ்கி 'வெடித்தது’ எப்படி?
டைட்டானிக் கப்பலை காண சென்ற 5 பேர் பலி - நீர்மூழ்கி 'வெடித்தது’ எப்படி?Twitter

டைட்டானிக் கப்பலை காண சென்ற 5 பேர் பலி - நீர்மூழ்கி 'வெடித்தது’ எப்படி?

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியிருக்கிறது.
Published on

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி வெடித்து சிதறியதில், அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.

டைட்டன் கப்பல் ஓஷன் கேட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது.

கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில் அது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறது. ஜூன் 19ம் தேதி கப்பல் காணாமல் போனது. கடந்த 5 நாட்களாக கனட பாதுகாப்புப்படை, அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் சில ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனங்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியிருக்கிறது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க கடலோரப்படையின் ரியர் அட்மிரல் ஜான் மௌகரின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்த பாகங்கள் வெடித்து சிதறிப்பதை காட்டுகிறது. ”இரண்டு பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். இவற்றை வைத்துப் பார்க்கும்போது கப்பல் சிதறியதாகக் தெரிய வருகிறது. கப்பலின் கடைசி நகர்வுகளை கூட கண்காணிக்க முடியாது ஏனெனில் கருப்புப் பெட்டி கூட இல்லை” என்றார்.

எப்படி நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியிருக்கிறது.

டைட்டானிக் கப்பலை காண சென்ற 5 பேர் பலி - நீர்மூழ்கி 'வெடித்தது’ எப்படி?
உலகின் மோசமான 7 கப்பல் விபத்துகள் - பதற வைக்கும் தகவல்கள்

கப்பலில் பயணித்தவர்கள் யார் யார்?

ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்.

ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.

சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் தந்தைக்காக நீர் மூழ்கியில் சென்றார்.

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர். இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற புனைப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

டைட்டானிக் கப்பலை காண சென்ற 5 பேர் பலி - நீர்மூழ்கி 'வெடித்தது’ எப்படி?
உலகிலேயே மிக நீளமான ஆற்றுக் கப்பல் : இந்தியாவில் அறிமுகம் - என்னென்ன சிறப்பம்சங்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com