இங்கிலாந்து மன்னரை கடவுளாக கொண்டாடும் பசிபிக் தீவு பழங்குடிகள் - ஏன்?

இளவரசர் பிலிப்ஸ் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த யோவ்னானென் பழங்குடி மக்கள் அவரைக் கடவுளாக பார்த்து வருகின்றனர். அவரது மரணம் இந்த பழங்குடி மக்களுக்கு மிகவும் மோசமான பாதிப்பாக இருந்தது.
இங்கிலாந்து மன்னரை கடவுளாக கொண்டாடும் பசிபிக் தீவு பழங்குடிகள் - ஏன்?
இங்கிலாந்து மன்னரை கடவுளாக கொண்டாடும் பசிபிக் தீவு பழங்குடிகள் - ஏன்?Twitter
Published on

வானுவாட்டு பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவு நாடு. இங்கு பல பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றனர். காரணம் இவர்கள் முன்னால் டியூக் ஆஃப் எட்டின்பர்க்காக இருந்த பிரின்ஸ் பிலிப் மீது அளவு க்டந்த அன்பு வைத்திருந்தனர்.

பிரின்ஸ் பிலிப் வாழ்ந்த நாட்களில் மிகவும் சிறந்த நபராக கருதப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு அவர் மரணித்தபோது எழுந்த சோக அலைகளில் நாம் பார்த்தோம்.

இளவரசர் பிலிப்ஸ் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த யோவ்னானென் பழங்குடி மக்கள் அவரைக் கடவுளாக பார்த்து வருகின்றனர். அவரது மரணம் இந்த பழங்குடி மக்களுக்கு மிகவும் மோசமான பாதிப்பாக இருந்தது.

இளவரசர் பிலிப்ஸ் மறைவுக்கு பிறகு இந்த பழங்குடி மக்கள் இளவரசர் சார்லஸ்ஸை அவரது இடத்தில் வைத்துப் பார்த்தனர். இதனால் கடந்த மே 6ம் தேதி நடந்த மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

அரச குடும்பத்தின் சார்பாக இந்த மக்களுக்கு மன்னர் சார்லஸின் உருவப்படம் வழிபாட்டுக்காக  வழங்கப்பட்டுள்ளது. 

இவர்கள் பிரின்ஸ் சார்லஸை, “ எங்கள் சக்தியின் மகன்” என்று அழைப்பதாகக் கூறப்படுகிறது. 

இங்கிலாந்து மன்னரை கடவுளாக கொண்டாடும் பசிபிக் தீவு பழங்குடிகள் - ஏன்?
Princess Diana : இன்றும் டயானா மரணம் குறித்து உலாவும் 5 சந்தேகங்கள் - A detailed report

முடிசூட்டு விழாவில் கொடியேற்றியும் நடனமாடியும் தங்கள் கொண்டாட்டத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக 5-6 ஆயிரம் மக்கள் வரை ஒன்றுகூடியுள்ளனர்.

இந்த தீவுவாசிகள் இளவரசர் பிலிப்பை ஒரு மலை ஆவியின் மகனாகக் கருதினர். 

இங்கிலாந்து மன்னரை கடவுளாக கொண்டாடும் பசிபிக் தீவு பழங்குடிகள் - ஏன்?
செளதி மன்னர் தெரியும், உலகை ஆளும், ஆண்ட இந்த 9 அரசர்கள் குறித்து தெரியுமா?

ஒரு மலை ஆவியின் மகன் கடலைத்தாண்டி தொலைதூர தேசத்திற்குச் சென்றான் என்ற புராணக்கதையிலிருந்து இந்த நம்பிக்கை உருவானது.

இளவரசர் பிலிப் 1974ம் ஆண்டு மகாராணி எலிசபெத்துடன் இந்த மக்களைச் சென்று பார்த்தார். அப்போது ஒரு பன்றியை மக்களுக்கு பரிசாக வழங்கினார்.

இங்கிலாந்து மன்னரை கடவுளாக கொண்டாடும் பசிபிக் தீவு பழங்குடிகள் - ஏன்?
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com