இத்தாலி : 3 வீடுகளை வெறும் 270 ரூபாய்க்கு வாங்கிய பெண் - எப்படி?
இத்தாலி : 3 வீடுகளை வெறும் 270 ரூபாய்க்கு வாங்கிய பெண் - எப்படி?Instagram

இத்தாலி : 3 வீடுகளை வெறும் 270 ரூபாய்க்கு வாங்கிய பெண் - எப்படி?

கைவிடப்பட்ட வீடுகளை குறைந்த விலையில் நம்மால் வாங்க முடியும். அதற்காக இவ்வளவு குறைந்த விலைக்கா? என வியக்க வைத்துள்ளார் ரூபியா டேனியல்ஸ் என்ற பெண். ஏன் வீடுகள் இப்படி குறைந்த விலையில் கிடைக்கின்றன தெரியுமா?

ஒரு நகரம் கைவிடப்பட பல காரணங்கள் இருக்கின்றன. முந்தைய காலத்தில் பஞ்சம், பிற நாட்டவர்களின் படையெடுப்பு காரணமாக இருந்தது. 

இந்த காலத்தில் பெருமளவு மக்கள் நகர்புறங்களுக்கு இடம் பெயர்வதால் கிராமங்கள் கைவிடப்படுகின்றன. சில நேரங்களில் காலநிலை மாற்றம் போன்றவையும் நகரங்கள் கைவிடப்பட காரணமாக அமையும். 

இப்படி கைவிடப்பட்ட வீடுகளை குறைந்த விலையில் நம்மால் வாங்க முடியும். அதற்காக இவ்வளவு குறைந்த விலைக்கா? என வியக்க வைத்துள்ளார் ரூபியா டேனியல்ஸ் என்ற பெண்.

49 வயதாகும் ரூபியா 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீடுகளை வாங்கிவிட்டார். இப்போதுதான் அவற்றை சரி செய்துள்ள்ளார். 

சோலார் இண்டஸ்ட்ரியில் பாணியாற்றும் ரூபியா குறைந்த விலை வீடுகள் குறித்து திடீரென கேள்விப்பட்டு அவற்றை வாங்க முடிவு செய்துள்ளார். 

இத்தாலி அரசு இதுபோன்ற கைவிடப்பட்ட நகரங்களில் மீண்டும் மக்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் அங்கு வீடுகளை மிகவும் மலிவான விலைக்கு விற்றுவருகின்றனர்.

சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த ரூவியா டேனியல்ஸ், “இது போன்ற செய்திகள் உண்மை தானா என சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதால் நான் இதுகுறித்து தேடினேன். மூன்று நாட்களில் எனது டிக்கெட், ஹோட்டல் எல்லாம் புக் செய்துவிட்டு இத்தாலிக்கு புறப்பட்டேன்” என இன்சைடர் ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

இத்தாலி : 3 வீடுகளை வெறும் 270 ரூபாய்க்கு வாங்கிய பெண் - எப்படி?
தனுஷ்கோடி முதல் உனகோடி வரை - பேய் நகரமாக கருதப்படும் இந்திய நகரங்களின் கதை!

இத்தாலியின் சிசிலி தீவில் இருக்கும் முசோமெலி என்ற இடத்தை அடைந்தார் ரூபியா. இந்த சிறிய நகரத்தில் 10,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு அவர் 3 கைவிடப்பட்ட வீடுகளை 3.30 டாலர்களுக்கு இந்திய மதிப்பில் 270 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இந்த 3 வீடுகளில் ஒன்றில் அவர் தங்கவும் மற்றொன்றை கலைக்கூடமாக மாற்றவும் மூன்றாவதை சமூக சேவை மையமாக செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளாராம்.

இத்தாலியில் இதுபோல பல கைவிடப்பட்ட நகரங்கள் உள்ளன. இவற்றை பேய் நகரங்கள் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இத்தாலி : 3 வீடுகளை வெறும் 270 ரூபாய்க்கு வாங்கிய பெண் - எப்படி?
ஐரோப்பா : இத்தாலி முதல் நார்வே வரை - பூலோக சொர்கமாக இருக்கும் இடங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com