பாபா வாங்கா : ஏலியன் முதல் சூரிய புயல் வரை - 2023ல் நம்மை சூழவிருக்கும் ஆபத்துகள் என்ன?

உலகில் பல முக்கிய நிகழ்வுகளை முன்பே கணித்துள்ள மூதாட்டி பாபா வாங்கா 2023ம் ஆண்டு குறித்து கூறிய 5 முக்கிய ஆருடங்களைக் காணலாம்.
பாபா வாங்கா
பாபா வாங்காNewsSense
Published on

2022ம் ஆண்டு இன்னும் 2 மாதங்களில் நிறைவடைய இருக்கிறது. அனைவருமே 2023 எப்படியிருக்கப் போகிறது என்பதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டோம்.

கொரோன பெருந்தொற்று முடிவுக்கு வந்திருந்தாலும் ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட பெரிய பிரச்னைகளை உலகம் கடந்து வந்திருக்கிறது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும். ஆனால் அப்படி நடக்குமா?

உலகில் பல முக்கிய நிகழ்வுகளை முன்பே கணித்துள்ள மூதாட்டி பாபா வாங்கா 2023ம் ஆண்டு குறித்து கூறிய 5 முக்கிய ஆருடங்களைக் காணலாம்.

1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டில் தனது 84-வது வயதில் இறந்து போனார். இறந்து போகும் போது அவருக்கு லட்சக்கணக்கில் சீடர்கள் இருந்தனர். பாபா வாங்கா எதிர்காலத்தை கணித்திருப்பதாக பல ஆருடங்களை சீடர்கள் முன்மொழிந்து வருகின்றனர்.

சுனாமி முதல் அணு ஆயுதப் போர் வரை பாபா வாங்காவின் அந்த 5 கணிப்புகள் என்ன என்றுக் காணலாம்.

சூரிய சுனாமி

பாபா வாங்காவின் ஆருடம் படி, இந்த ஆண்டில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி தாக்கக் கூடும். இதனால் பூமியின் காந்த புலம் வலுவிழக்கும்.

பெரிய நாடுகள் உயிரியல் - ஆயுத தாக்குதல் நடத்தும்

2023ல் பெரிய உலக நாடுகள் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறிய நாடுகளைத் தாக்கும். ஏற்கெனவே 2019 முதல் நம்மை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று சீனாவின் உயிரியல் ஆயுதத்தால் ஏற்பட்டது என சிலர் கருதி வருவது குறிப்பிடத்தக்கது.

பாபா வாங்கா
பாபா வாங்கா: சுனாமி, கொரோனா மற்றும் மூன்றாம் உலகப் போரை முன்பே கணித்தாரா இவர்?

ஏலியன்கள் நம்மை தாக்கும்

ஏலியன்கள் பற்றிய புதிர்கள் பல ஆண்டுகளாக நம்மை சூழ்ந்திருக்கின்றன. ஏலியன்களுக்கு ஏற்கெனவே மனிதர்களைத் தெரிந்திருக்குமா? அவை நம்மிடம் எப்படி நடந்துகொள்ளும் என எதுவும் இப்போது நமக்குத் தெரியாது.

ஆனால் 2023ல் ஏலியன்கள் நம்மைத் தாக்கும் என்றும் அதனால் லட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள் என்று பாபா வாங்கா கூறியுள்ளார்.

பாபா வாங்கா
பாபா வங்கா : நம்மை சூழ இருக்கும் அடுத்த ஆபத்து இதுதான் - Baba vanga கூறும் ஆருடம்

ஆசியாவில் அணு வெடிப்பு

ஆசியாவில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் அணு வெடிப்பு ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இன்று பல அணு மின் நிலையங்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். அவற்றில் ஏதோ ஒன்று விபத்துக்கு உள்ளானால் அது பெரும் தீங்கு விளைக்கும்.

இந்த ஆருடம் ஒரு வேலை உக்ரைன் - ரஷ்யா போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து இருக்கலாம் என பாபா வாங்காவை நம்பும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆய்வக மனிதர்கள்

2023ம் ஆண்டு ஆய்வகங்களில் மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். அவர்களின் நிறம், உயரம் உட்பட அனைத்துமே முடிவு செய்யப்பட்டு தயாரிக்கப்படுவார்கள் என்று பாபா வாங்கா கூறியுள்ளார்.

பாபா வாங்கா
பாபா வாங்கா: சுனாமி, கொரோனா மற்றும் மூன்றாம் உலகப் போரை முன்பே கணித்தாரா இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com