HT Parekh: மும்பை சால்வாசி HDFC நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? வியக்கவைக்கும் வெற்றி கதை!
HT Parekh: மும்பை சால்வாசி HDFC நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? வியக்கவைக்கும் வெற்றி கதை! Twitter
பிசினஸ்

HT Parekh: மும்பை சால்வாசி HDFC நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? வியக்கவைக்கும் வெற்றி கதை!

Antony Ajay R

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருபாய் அம்பானி மிகப் பெரிய பணக்காரராக இருந்தவர். ஆனால் அவரது கதையைத் தொடங்கியது புபனேஸ்வரில் உள்ள சால் எனும் குடியிருப்பு கட்டடங்களில் தான். 

இன்று உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் முகேஷ் அம்பானி அவரது சகோதரர் அணில் அம்பானி உள்ளிட்ட 8,9 பேருடன் ஒரே அறையில் தூங்கும் நிலையில் இருந்ததாக டி.என்.ஏ வலைத்தளம் கூறுகிறது.

மும்மையின் சால்களில் இருந்து வானத்தைத் தொட்ட கதைகள் அம்பானி குடும்பத்தைத் தாண்டி இன்னும் சிலருக்கும் பொருந்துகிறது. அதில் ஒருவர்தான் ஹெச்.டி.பரிக். 

ஹெச் டி எஃப் சி நிறுவனத்தைத் தொடங்கியவரான இவரின் வெற்றிக்கதை என்ன?

ஹஸ்முக் தகோர்தாஸ் பரேக் அல்லது ஹஸ்முக்பாய் பரேக் படிக்கும் காலத்தில் பகுதி நேர வேலைகளுக்கு சென்று கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார்.

ஹஸ்முக்கின் குடும்பத்தினர் வங்கிப்பணியை அடிப்படையாக கொண்டவர்கள். சூரத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்து தனித்து மும்பை வந்து பொருளாதார பட்டம் பெற்றார். 

அதன் பிறகு இங்கிலாந்து சென்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் பி.எஸ்.சி பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்தியா திரும்பியவர் மும்பையில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் ஹர்கிசந்தாஸ் லக்மிதாஸ் என்ற பங்கு சந்தை தரகு நிறுவனத்தில் அவரது பணியைத் தொடங்கினார்.

ஐசிஐசிஐ வங்கியிலும் பணி புரிந்தவர், துணை மேலாளராக தொடங்கி, சேர்மேனாகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார். 16 ஆண்டுகள் அந்த பணியில் இருந்தார்.

66 வயதில் எல்லாரும் ஓய்வெடுக்க நினைக்கும் தருணத்தில் ஹஸ்முக்பாய், இந்தியாவின் மிடில் கிளாஸ் குடும்பங்களை உயர்த்தும் ஒரு ஐடியாவுடன் கம்பேக் கொடுத்தார்.

1977ம் ஆண்டு ஒரு நிதி நிறுவனமாக ஹெச் டி எஃப் சி-யை நிறுவினார். 1978ம் ஆண்டு முதல் ஹோம் லோனை வழங்கினார். 1984ம் ஆண்டுக்குள் வருடத்துக்கு 100 கோடி கடன் வழங்கும் நிறுவனமாக உயர்ந்தது ஹெச் டி எஃப் சி.

1992ம் ஆண்டு இவரது பணிகளைப் பாராட்டி இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இப்போது இந்திய அளவில் மிகவும் முக்கியமான நிதி நிறுவனமாகவும் வங்கியாகவும் ஹெச் டி எஃப் சி செயல்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?