Uber: மொபைலில் சார்ஜ் குறைவாக இருந்தால் அதிக கட்டணமா? - நம்மை கண்காணிக்கிறதா ஊபெர்? Twitter
பிசினஸ்

Uber: மொபைலில் சார்ஜ் குறைவாக இருந்தால் அதிக கட்டணமா? - நம்மை கண்காணிக்கிறதா ஊபெர்?

Antony Ajay R

பயனர்களின் மொபைலில் சார்ஜ் குறைவாக இருந்தால் அதிக கட்டணம் கேட்கப்படுவதாக ஊபெர் மீது சமீபத்திய அறிக்கையில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Derniere Heure என்ற பெல்ஜியம் செய்திதாள் வெளியிட்ட அறிக்கையின் படி, சில சமயம் வெவ்வேறு பயனர்கள் ஒரே இடத்தில் இருந்து ஒரே இடத்துக்கு செல்ல ஊபரைப் பயன்படுத்தினால் மொபைலில் சார்ஜ் குறைவாக இருப்பவருக்கு ஊபெர் அதிக கட்டணம் காட்டுகிறது.

மொபைல் போனில் சார்ஜ் குறைவாக இருக்கும்போது உடனடியாக புக் செய்ய வேண்டும் என நினைப்போம். மொபைல் சார்ஜைத் தெரிந்துகொண்டு ஊபெர் நிறுவனம் அதிக பணம் காட்டுகிறது.

இதுவே மொபைல் சார்ஜ் இருந்தால் மற்ற ஆப்களிலும் செக் செய்து புக் செய்வோம் என்பதால் சாதாரண கட்டணம் காட்டுகிறது என்று அந்த செய்தி தாள் கூறுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஊபெர் நிறுவனம் மறுத்துள்ளது.

Derniere Heure செய்திதாள் நிறுவனம் இது குறித்து தாங்கள் டெஸ்ட் செய்து பார்த்ததாகத் தெரிவிக்கின்றனர்.

ஒரே நேரத்தில் அவர்களது அலுவலகத்தில் இருந்து சிறுதொலைவில் உள்ள இடத்துக்கு புக் செய்துள்ளனர்.

ஒரு மொபைலில் 84% பேட்டரி சார்ஜும் மற்றொன்றில் 12% பேட்டரி சார்ஜும் இருந்திருக்கிறது. முதலாவதில் 16.6 யூரோ (1498 ரூபாய்) மற்றும் இரண்டாவதில் 17.56 யூரோ (1585 ரூபாய்) காட்டியிருக்கிறது.

ஊபெர்

இந்த சோதனையால்தான் விலையை முடிவு செய்ய பயனர்களின் பேட்டரி சார்ஜை ஊபெர் கண்காணிக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஊபெர் நிறுவனமோ தங்களது செயலியால் பயனர்களின் பேட்டரியைக் கண்காணிக்க முடியாது என்றும் தாங்கள் சார்ஜை வைத்து விலை நிர்ணயம் செய்வதில்லை என்றும் கூறியுள்ளது.

ஆனாலும் ஏன் ஒரே நேரத்தில் ஒரே இடத்துக்கு இரண்டு கட்டணங்களை ஊபர் விதிக்கிறது? எந்த அடிப்படையில் கட்டணங்கள் முடிவுசெய்யப்படுகின்றன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

"ஊபெர் மூலம் முன்பதிவு செய்யப்படும் பயணங்களுக்குப் நிர்ணயிக்கப்படும் டைனமிக் விலையானது, தற்போதுள்ள சவாரிகளுக்கான தேவை (கிராக்கி) மற்றும் அதற்குப் பதிலளிக்கக்கூடிய ஓட்டுநர்களின் விநியோகத்தால் தீர்மானிக்கப்படுகிறது" என நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டே ஊபரின் பொருளாதார ஆய்வாளரான கெய்த் சென் என்பவர் ஒரு ஊடகத்துக்கு அளித்த போட்டியில், போனில் சார்ஜ் குறைவாக இருப்பவர்கள் அதிக விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்ததாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்களின் தரவுகளைப் பயன்படுத்தி ஊபெர் எப்படி பணம் சம்பாதிக்கிறது என்பதை இதன் மூலம் காணமுடிகிறது.

பயனர்களின் நடத்தையை சாதகமாக பயன்படுத்தி அதிக லாபம் பெறுகிறதா என்றும் கவலைகள் எழுந்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?