உலக வரலாற்றின் பணக்கார வியாபாரி - ஆங்கிலேயருக்கே நிதி உதவி செய்தவர் பற்றி தெரியுமா? Twitter
பிசினஸ்

உலக வரலாற்றிலேயே பணக்கார வியாபாரி! ஆங்கிலேயருக்கே நிதி உதவி செய்தவர் பற்றி தெரியுமா?

Antony Ajay R

முற்காலத்தில் ஒரு நாட்டின் பெரும்பாலான செல்வங்கள் எல்லாம் அரசர்களிடம் தான் இருந்தது. 

எந்த நாட்டிலும் வணிகர்களோ, வீரர்களோ பெரும் செல்வந்தர்களாக இருக்கவில்லை. ஆனாலும் உலகிலே மிகப் பெரிய பணக்கார வணிகராக இருந்தார் ஒரு இந்தியர். 

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனி அவரை உலகியேயே பணக்காரராக கருதியது. விர்ஜி வோராதான் அந்த வணிகர். அந்தகாலத்தில் மசாலா வியாபாரத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தார். 

முகலாயர் ஆட்சிகாலத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக திகழ்ந்தார். பிரிட்டீஷின் கிழக்கிந்திய கம்பனியிலே முதலீடு செய்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

விர்ஜி வோரா 1590களில் சூரத்தில் பிறந்தவர். 1670 வரை வாழ்ந்தவர் முகலாயர் ஆட்சியிலும் கிழக்கிந்திய கம்பனியின் தொடக்ககாலத்திலும் வாழ்ந்த செல்வந்த வணிகர் ஆவார்.

அந்த காலத்தில் அவரிடம் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் இன்றைய மதிப்பைக் கணக்கிடவே முடியாது.

மொத்தமாக மசாலாப் பொருட்களை விற்பது, வட்டிக்கு கடன் வழங்குவது, முதலீடுகள் செய்வது அவரது தொழிலாக இருந்தது. மசாலாப் பொருட்கள் மட்டுமல்லாமல் தங்கம், வெள்ளி, பவளம், தந்தம் போன்றவற்றை மொத்தமாக விற்றார்.

கிழக்கு டச் கம்பனி, ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பனிகளுக்கு இவர் கடன் வழங்கியிருக்கிறார். முகலாய மன்னர் ஔரங்கசீப்புக்கு முக்கிய நிதி ஆலோசகராக திகழ்ந்துள்ளார்.

ஔரங்கசீப் டெக்கான் பகுதிகளை கைப்பற்ற போரில் ஈடுபட்ட போது விர்ஜி வோராவிடம் உதவிக்கு பணம் கேட்டு தூது அனுப்பியிருக்கிறார். அப்போது வோரா அவருக்கு உதவியுள்ளார்.

வோராவின் செல்வக்குவிப்பு அக்கம்பக்கத்தினரது கண்களை உறுத்த தொடங்கியது. மராத்திய மன்னர் சிவாஜி சூரத் மீது படையெடுத்தபோது வோராவின் வீட்டையும் பிற சொத்துக்களையும் கொள்ளையடித்தார்.

வோரா ஓரளவு மீண்டும் செல்வத்தை சேர்த்தாலும் இழந்தவற்றை முழுவதுமாக பெற அவரால் முடியவில்லை. வோரா தனது செல்வத்தை கொடையாக அளித்ததற்காகவும் அறியப்படுகிறார். மக்களுக்காக பல சமயங்களில் நிதி திரட்டியிருக்கிறாராம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?