Ajith Kumar Twitter
சினிமா

அஜித் குமார் : திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை அள்ளிய AK

Antony Ajay R

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் திருச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு போட்டியில் கலந்துகொண்டது நாம் அறிந்ததே.

போட்டியில் கலந்துகொண்ட போதே ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு எழுந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் அஜித் ரசிகர்களை சந்தித்ததால், ரசிகர்கள் அதிகப்படியாக ஆராவாரம் செய்தனர்.

திருச்சி கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்றது.

கடந்த 24ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்ற போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறன.

ரைபிள் மற்றும் பிஸ்டல் சுடும் போட்டிகளில் தமிழகம் முழுவதுமிருந்து 1200 பேர் கலந்துகொண்டனர்.

45 முதல் 60 வயதினருக்கான சீனியர் மாஸ்டர் பிரிவில் 10, 25, 50 மீட்டர் போட்டிகளில் கலந்துகொண்டார் நடிகர் அஜித்.

போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வீரபுரம் போலீஸ் ட்ரெயினிங் சென்டரில் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் அஜித் குமார். இந்த பயிற்சிகளின் விளைவாகவே இப்போது பதக்கங்களைக் குவித்திருக்கிறார் அஜித்.

6 போட்டிகளில் கலந்துகொண்ட அவர் 4 தங்கப்பதக்கமும் 2 வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?