Bakkiyalakshmi Twitter
சினிமா

Bakkiyalakshmi Serial : ராதிகாவின் நடவடிக்கையால் மனம் மாறிய கோபி

ஆதினி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடர் காமெடியாக நகர்கிறது. இன்றைய எபிசோடில் பாக்கிய செய்யப் போகும் கின்னஸ் ரெகார்ட் முயற்சியைக் கோபி கிண்டல் அடிக்கிறார். முன்னர், கோபி பாக்கியாவின் பிஸ்னஸை கைவிட வேண்டும் என்று சொன்னதால் ஒட்டு மொத்த குடும்பமும் வருத்தத்தில் இருந்தது.

பாக்கியாவை திட்டிவிட்டு ராதிகா வீட்டுக்கு செல்கிறார் கோபி. அங்கு ராதிகா பாக்கியாவின் பிஸ்னஸ் பற்றிப் பேசி வருத்தப்படுகிறார். மேலும் பாக்யாவின் கணவரைச் சந்தித்து பிஸ்னஸ் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்குமாறு கேட்கப் போகிறேன் என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சி ஆகிறார் கோபி. நமக்கு எதுக்கு மத்தவங்க சமாச்சாரம் என்று கோபி சமாளிக்க, ``இல்ல கோபி, நான் டீச்சருக்காக இதைச் செய்வேன். டீச்சரின் கணவரை நாம ரெண்டு பேரும் தான் பார்க்க போறோம், வாங்க கிளம்புங்க’’ என்று ராதிகா கூப்பிடுகிறார். கோபிக்கு மினி ஹார்ட் அட்டாக்கே வருகிறது. ராதிகாவிடன் தானே பாக்கியவின் கணவரிடம் பேசி சம்மதிக்க வைப்பதாக வாக்கு கொடுக்கிறார்.

அடுத்ததாக பாக்கியாவிடம் ``நீ உன் பிஸ்னஸ திரும்பவும் ஸ்டார்ட் பண்ணு பாக்கியா. நான் கோவத்துல சொல்லிட்டேன்’’ என்று அசடு வழிகிறார் கோபி. ஈஸ்வரி அம்மாவும், ஜெனியும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிக்கின்றனர். பாக்கியாவும் அதிர்ச்சியாகிறார்.

ராதிகாவுக்கு பயந்து பாக்யாவிடம் பம்புகிறார் கோபி. அதன் பின்னர் நிம்மதி ஆகிறார் பாக்கியா. இந்த விஷயத்தை ராதிகாவிடம் சொல்கிறார். ராதிகா கோபி பேசி தான் பாக்யாவின் கணவர் ஒப்புக்கொண்டதாக நினைத்துக் கொள்கிறார். இவ்வளவு பழகியும் பாக்கியாவின் கணவர் கோபியை ராதிகா பார்க்காதது தான் சீரியலின் ஹைலைட். இருவருக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு படாத படுகிறார் கோபி.

Bakkiyalakshmi

மற்றொரு புறம் பாக்கியாவின் சமையல் பிஸ்னஸை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர புதிய உத்தியைக் கையாள்கிறார் எழில். பாக்கியா வேகமாக சமைக்க கூடியவர் என்பதை அறிந்து, அவரை வைத்து 100 வகை டிஷ் செய்து, கின்னஸ் ரெகார்ட் செய்யத் திட்டமிடுகிறார் எழில். இதனால் பாக்கியாவின் பிஸ்னஸ் மீண்டும் சூடு பிடிக்கும் என்று நம்புகிறார்.

இதைக் கேள்விப்பட்ட கோபி கிண்டல் செய்து சிரிக்கிறார். அம்மாவுக்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து செய்யும் எழில், தன் காதலி அமிர்தாவையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறார். அமிர்தா தன் மீது பொசசிவாக இருப்பதை உணர்ந்து, ``அமிர்தா இந்த ஜென்மத்துல என் மனசுல நீங்க மட்டும் தான் இருப்பீங்க. உங்களுக்காகவும் நிலாவுக்காகவும் தான் என் வாழ்க்கை’’ என்று நெகிழ்கிறார். இதைக் கேட்ட அமிர்தா வெட்கத்தில் மகிழ்ச்சியில் முகம் சிவக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?