EeramanaRojave2 twitter
சினிமா

அம்மா இந்த தாலிய கழட்டிடவா ப்ளீஸ்! - ஈரமான ரோஜாவே 2 ஹைலைட் காட்சி

ஆதினி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே-2 தொடரின் ப்ரோமோ-க்கள் அண்மையில் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன.அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்தால், அப்படியே மீண்டும் அதே  உருட்டு.. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜோடி மாறி போகிறது. அவர்களுக்குள் எப்படி செட் ஆகி காதல் மலர்கிறது என்பது தான் கதை.

‘ஈரமான ரோஜாவே’ முதல் பாகத்தில் மலராக பவித்ராவும் வெற்றியாக திரவியமும் நடித்திருந்தனர். இவர்களுக்கு பல ரசிகர்கள் பக்கம் இன்று வரை இயங்கி வருகிறது. மற்றொரு ஜோடியான அகிலா-புகழ் கதாபாத்திரங்களில் சாய் காயத்ரி - ஷியாம் நடித்திருந்தனர். இவர்களுக்கும் ரசிகர்கள் வட்டம் அதிகம். இதில் நடித்த நான்கு பேரும் தற்போது சீரியல்களில் பிஸியாக உள்ளனர். 

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஈரமான ரோஜாவே -2 தொடர் வெளியானது. வேறொரு வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் என்று பார்த்தால் மீண்டும் அதே ஜோடி மாறிப் போன கதை தான்.

EeramanaRojave2

மூன்று நாயகன் (அண்ணன் தம்பிகள்), மூன்று நாயகிகள்(அக்கா தங்கைகள்). இவர்களுக்குள் விதி எப்படி முடிச்சு போடுகிறது என்பது தான் கதையின் ஒன்லைன். ஹீரோ-ஹீரோயின்-இன் தந்தைகள் இருவருமே நல்ல நண்பர்கள். இவையனைத்தும் அப்படியே முதல் பாகத்தின் கதை தான். பொதுவாக இரண்டாம் பாகம் எடுக்கும் போது, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான் எடுப்பார்கள். ஆனால் இந்த சீரியலில் அப்படியே கேரக்டர்களை மட்டும் மாற்றி இரண்டாம் பாகம் எடுத்துள்ளனர். 

பிரியாவும் (கேபி), ஜீவாவும் (திரவியம்), காதலிக்கின்றனர். சீரியலில் பாதி நேரம் இவர்களின் காதல் காட்சிகளை தான் காட்டுவார்கள். இந்நிலையில் பிரியாவின் அக்காவுக்கும், ஜீவாவின் அண்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இதனால் இருவரும் செம உற்சாகத்தில் இருக்கின்றனர். காதலுக்கு ஈஸியாக ஓகே சொல்லிவிடுவார்கள் என்பது இவர்களின் கணக்கு.

இரண்டு குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்கள் ஆகின்றனர். திருமணத்தன்று பிரியாவின் அக்கா கடத்தப்படுகிறார். இதனையறிந்த ஜீவா அவரை காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வருகிறார். ஆனால் அதற்குள் பிரியாவுக்கும் ஜீவாவின் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். வழக்கம் போல் நாயகி பிரியாவின் காலில் விழுகிறார் அவளின் அப்பா.

EeramanaRojave2

அவ்வளவு தான் திருமணம் நடந்து முடிகிறது, தாலி கட்டி முடித்த அடுத்த செகண்ட் நாயகன் ஜீவா, மணப்பெண்ணுடன் மண்டபத்துக்கு என்ட்ரி கொடுக்கிறார். தன் காதலி மனக்கோலத்தில் தன் அண்ணனுடன் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார். அடுத்ததாக ஒரு எமோஷனல் பிளாக் மெயில் செய்து ஜீவாவுக்கும் பிரியாவின் அக்காவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

நான் பென்சில் மறந்து வெச்சிட்டு வந்துட்டேன் உன் பென்சில் கொடேன் என்பது போல, மணப்பெண்ணை மாற்றி திருமணம் செய்து வைக்கின்றனர். மணப்பெண் காணாமல் போனால், முறையாக தேடாமல் தங்கையை பிடித்து கல்யாணம் கட்டி வைப்பதெல்லாம் கொள்ளு தாத்தா காலத்தில் கூட நடந்திருக்குமா என்று தெரியவில்லை. இயக்குநர் வயதானவர் என்று நினைக்கிறேன். 

இதில் ஒரு ஹைலைட்டான காட்சி, பிரியா தன் அக்காவை பார்த்ததும் தன் அம்மாவிடம் ``அம்மா அதான் அக்கா வந்துட்டால இந்த தாலியை கழட்டிட்றேன் பிளீஸ் என்கிறாள். அதற்கு அம்மா``அடியேய் தாலி ஒன்னும் பாசிமணி கிடையாது’’ என்கிறார். ``பிடிக்காம கட்டின தாலி பாசி மணி தான்மா’’ என்று கருத்தாக பேசுகிறார் பிரியா. ஆனால் அம்மா சம்மதிக்கவில்லை. இப்படியே மாற்றி புலம்பல் காட்சிகளாக போர் அடிக்கின்றனர். இன்றைய எபிசோடில் ஜீவாவின் பிரியாவும் காதலித்த விஷயத்தை பிரியாவின் அம்மா கண்டுபிடித்து விடுகிறார். அவசர குடுக்கை மாதிரி கல்யாணம் பண்ணி வெச்சிட்டோமே என்று கதறி அழுகிறார். இனி எப்படி இந்த திருமண வாழ்க்கை நகர்கிறது என்பதே கதை

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?