Announcement Twitter
சினிமா

பரியேரும் பெருமாள், குதிரைவால் வரிசையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் 5 -வது படம்

Antony Ajay R

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனின் 5வது படத்தின் முதல் பார்வை நாளை வெளியாவதாக அப்டேட்ஸ் வந்திருக்கின்றன. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவாலைத் தொடர்ந்து இந்த படம் வெளியாகிறது.

கடைசியாக நீலம் புரொடக்‌ஷனில் வெளியான குதிரைவால் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஞ்சித்தின் அடுத்த படமான நட்சத்திரங்கள் நகர்கிறது இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறது. விக்ரம் உடன் ரஞ்சித் பணியாற்றும் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இப்படியாக ரஞ்சித் பரபரப்பாக இருக்கும் வேளையில் நீலம் ஐந்தாவது படம் தொடர்பான அறிவிப்பும் வந்திருக்கிறது.

இந்த படத்துக்கு ஜெ.பேபி எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் டிக்கிலேனா மாறன் ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவை மிளிரும் உணர்வுப்பூர்வமான குடும்பக்கதை இது என்கின்றனர். வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோரிடம் பணிபுரிந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

பூஜை

சூர்யா 41

18 ஆண்டுகளுக்கு பிறகு பாலா உடன் இணைந்திருக்கிறார் சூர்யா. சூர்யாவின் கேரியரில் பாலா இயக்கிய நந்தா படம் மிக முக்கிய திருப்பமாக இருந்தது. நந்தாவுக்குப் பிறகு தான் சூர்யா ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகப் பார்க்கப்பட்டார். அதே போல சூர்யாவின் ஆகச் சிறந்த நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வந்ததில் பாலாவின் பிதா மகன் படத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதன்பின் அவன் இவனில் கேமியோ மட்டும் செய்த சூர்யா இப்போது மீண்டும் பாலாவுடன் பணியாற்றுகிறார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?