Janardhanan

 

Twitter

சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று : ஜனார்த்தன் நல்லவரா கெட்டவரா?

Newsensetn

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் லட்சுமி அம்மாவின் மறைவால் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டங்கள் இல்லை.  `நம்ம வீட்ல தான கொண்டாடக் கூடாது, வேற வீட்ல போய் கொண்டாடலாம்ல’ என்ற கான்செப்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள் பொங்கலை கொண்டாட போகின்றனர்.

கண்ணன் ஐஸ்வர்யா திருமணம் சீரியலில் திருப்புமுனையாக அமைந்தது. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரம், அமைதியின் உருவாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி ஐஸ்வர்யா வில்லத்தனம் செய்து வருகிறார்.  நைட்டி பஞ்சாயத்தில் தொடங்கிய சலசலப்பு பொங்கல் கொண்டாட்டம் வரை நீடிக்கிறது. குறிப்பாக முல்லை, மீனா என இருவரையுமே ஐசு அடிக்கடி கடுப்பேத்தி விடுகிறார்.

தனம் 80ஸ் கிட் போன்ற பொறுப்பாக நடந்து கொள்கிறார் என்றால் மீனா 90ஸ் கிட் போன்ற வெடுக் வெடுக்கென்று பேசி விடுவது வழக்கம். பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் பின்பற்றப்பட்டு வரும் சில வழமையான விஷயங்களை எதிர்த்து கேள்விக்கேட்டவர் மீனா தான். பொம்பளைங்க வீட்ல தான் இருக்கணுமா? என்று வேலைக்கு சென்றார், வாஷிங் மெஷின் வாங்குனா தான் என்ன? என்று கேள்வி கேட்டார்.. இப்போது மீனாவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக ஐசு புரட்சி செய்து வருகிறார்.

Pandian Stores

நேற்றைய எபிசோடில் பரண் மீது இருக்கும் பொருட்களை இறக்கி வைப்பது குறித்து பேசிக் கொண்டிருந்த போது, முல்லை யதார்த்தமாக அதுக்கு தான் கண்ணன்னு ஒருத்தன் இருக்கானே, அவன் பொருட்களை இறக்கி வைப்பான்’ என்று சொல்ல சட்டென கோவப்பட்டு விட்டார் ஐசு. `ஏன் கதிர் மாமா எடுத்து வைக்கமாட்டாரா’  என்று பதிலடி கொடுத்து முல்லைக்கு பல்பும் கொடுத்து கடுப்பேற்றி விட்டார்.

நேற்றைய எபிசோடில் இன்னொரு ஹைலைட்,  ஐசுவை பொங்கலுக்கு அழைக்க அவரின் சித்தி வந்திருந்தபோது, வீட்டின் பெரியவர்களை கேட்காமலேயே, `நானும் கண்ணனும் பொங்கலுக்கு வந்திட்றோம் சித்தி’ என்று வாக்கு கொடுத்து விட்டார் ஐசு. அதன்பின்னர் சித்தி வீட்டுக்கு போவதற்கு உண்மையான காரணத்தை முல்லையிடம் விளக்கினார் ஐசு. ‘நான் அடிக்கடி பாட்டியை பார்க்க போகலைன்னா என் சொத்தையும் சேர்த்து சித்தி ஆட்டைய போட்டுடும். அதான் போறேன்’ என்று ஐசு விளக்க, ``வெஷம் வெஷம் எவ்ளோ கிரிமினலா யோசிக்குறா’’  என்பது போல முல்லை ஐசுவை பார்த்து கொண்டிருந்தார்.

Pandian Stores

இன்றைய எபிசோடில் மீனாவை தன் வீட்டுக்கு பொங்கலுக்கு அழைக்க ஜனார்த்தன் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு வருகிறார். வழக்கம் போல் ஜீவா தன் அண்ணனை விட்டு வர மாட்டேன் என்கிறார். `` அட அண்ணனையும் கூட்டிட்டு வாங்க மாப்ள, எல்லாருமே நம்ம வீட்டுக்கு வந்திடுங்க’’ என்று அழைப்பு விடுக்கிறார் ஜனார்த்தனன்.  `நம்ம அப்பா இவ்ளோ நல்லவரா’ என்பது போல அதிர்ச்சியான மீனா சூப்பர் பா என்று தன் அப்பாவை பாராட்டுகிறார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தனித்துவம் இதுதான். எந்த கதாப்பாத்திரத்தையும் மொத்தமாக வில்லனாகவும் வில்லியாகவும் சித்தரிக்க மாட்டார்கள். ஒருவரின் சூழ்நிலையை பொறுத்து அவரின் நடவடிக்கைகள் மாறும் என்பதை இந்த சீரியல் பிரதிபலிக்கிறது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஜனார்த்தனன் வீட்டில் பொங்கலை கொண்டாடுகிறார்கள், அங்கு மூர்த்திக்கு சின்ன அவமானம் ஏற்படுகிறது. அது யார், எப்படி என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?