தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் Twitter
சினிமா

"பரியேறும் பெருமாள்" படத்தில் நடித்த தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் காலமானார்

தன்னுடைய 17 வயதில் இருந்தே தெரு கூத்தையே நம்பி பிழைத்து வந்த தங்கராஜ், சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பெண் வேடம் போட்டு தெரு கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.

Priyadharshini R

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'.

இப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நெல்லை தங்கராஜ் அறிமுகமானார்.

தன்னுடைய 17 வயதில் இருந்தே தெரு கூத்தையே நம்பி பிழைத்து வந்த தங்கராஜ், சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பெண் வேடம் போட்டு தெரு கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.

இவரது திறமையை பார்த்து வியந்த மாரி செல்வராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் இவரை நடிக்கவும் வைத்தார்.

அவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?