Rajinikanth Twitter
சினிமா

தினமும் குடி, சிகரெட் தான்! ”என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி”- நெகிழ்ந்த ரஜினிகாந்த்

Priyadharshini R

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தாலும் இன்று பல கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன்வசம் வைத்துள்ளார் ரஜினிகாந்த். அவரது ஸ்டைல் தான் அவரின் தனித்துவம் என்றே கூறலாம்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த சூழலில் சென்னையில் சாருகேசி திரைப்பட அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இளமைக் காலம் குறித்தும், தனது மனைவி குறித்தும் பேசிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினி,

இப்போது எனக்கு 73க்கு வயதாகிறது. இந்த வயதில் நான் இந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு எனது மனைவிதான் காரணம். நடத்துநராக இருந்த காலத்தில் எனக்கு சில தவறான கூட்டாணிகள் இருந்ததால் கெட்ட பழக்கங்கள் வந்தது.

நடத்துநராக இருந்த போது நான் தினசரி இரண்டு வேளை அசைவம் அதுவும் மட்டன் தான் சாப்பிட்டு வந்தேன். மேலும், தினமும் மதுவும் குடித்து வந்தேன். சிகரெட்டும் கூட கணக்கே இல்லாமல் இருக்கும்.

காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65 தான் சாப்பிடுவேன். சைவம் சாப்பிடுபவர்களைப் பார்த்தாலே எனக்குப் பாவமாக இருக்கும். ஆடு, மாடு சாப்பிடும் இதை எப்படி சாப்பிடுகிறார்கள் என நினைப்பேன். ஆனால், இப்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன்.

சிகரெட், மது, நான் வெஜ் ஆகியவை மிகவும் மோசமான காம்போ. இந்த மூன்றையும் நீண்ட காலத்திற்கு அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டவர்கள் யாரும் எனக்குத் தெரிந்து 60 வயதைக் கடந்து வாழ்ந்தது இல்லை.

அப்படியே இருந்தாலும் அவர்கள் படுக்கையில் படுத்த படுக்கையாகவே உள்ளனர். எழுந்து கூட நடக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். இதற்குப் பலரையும் உதாரணமாகச் சொல்லலாம்.

இப்படி இருந்த என்னை அன்பாலேயே மாற்றியவர் எனது மனைவி. இதுபோன்ற பழக்கங்களை யார் சொன்னாலும் உடனடியாக விட்டுவிட முடியாது.

இருப்பினும், அன்பால் அவர் தான் என்னை மாற்றினார். உரிய மருத்துவர்களை அழைத்து வந்து அறிவுரை கொடுத்தார். திருமணத்திற்கு முன்பு நான் எப்படி இருந்தேன். திருமணத்திற்குப் பிறகு எப்படி இருந்தேன் என்பதை எனது படங்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். இதற்காகவே நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?