பாலிவுட்டில் பிரபல நடிகை சன்னி லியோன். பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சன்னி லியோனைத் தெரியாதவர்கள் மிகக் குறைவுதான். நிர்வாணப் படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்தார். பாலிவுட்டில் முதல் படமான Jism 2 மூலம் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்தார். பல ரியாலிட்டி ஷோக்கள், ஈவென்ட்கள் மூலம் மக்களிடம் சென்றடைந்தார் சன்னி லியோன்.
தற்போது சன்னி லியோன் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெருக்கின்றன. இந்தி மட்டுமின்றி தென்னிந்தியப் படங்களிலும் சன்னி லியோனியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் பாலிவுட் திரைத்துறையில் சன்னிலியோனிக்கு எதிராகப் ஏற்றதாழ்வு காட்டப்படுகிறது. பிராண்டுகள் அவரிடத்தில் பாரபட்சம் காட்டுவது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் சன்னி லியோன்.
அவர், ஆடை பிராண்ட்கள் நிகழ்ச்சிகளுக்குத் துணி வழங்கும் அளவு அவர் பெரிய ஆள் எல்லாம் இல்லை என நினைப்பதாக சன்னி லியோனி கூறியுள்ளார்.
“இந்தியாவில் என்னை விளம்பரங்களில் நடிக்க வைக்க எந்த மேக் அப் நிறுவனமும் இல்லை. இது வருத்தமளிக்கிறது. நானும் அவர்களைப் போல சிறந்தவளாக இருக்க முடியும். எந்த ஆடை நிறுவனமும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆடை வழங்குவதில்லை. நான் அவர்கள் அந்த அளவு பெரிய ஆள் இல்லை என நினைக்கிறார்கள்” என சன்னிலியோன் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். இதனால் அவரது ஆடை மற்றும் மேக்கப்காக சொந்த பிராண்டை தொடங்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust