Vaani Jeyaram ட்விட்டர்
சினிமா

Vani Jairam: பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

Keerthanaa R

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார். இவருக்கு வயது 78.

இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி, அசாமி, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.

தமிழில் நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும், இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, ஒரே நாள் உனை நான் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார் வாணி ஜெயராம்

அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ஆகிய படங்களில் இவர் பாடிய பாடல்களுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் வாணி ஜெயராமுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாணி ஜெயராமின் குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை. தலைமுறைகள் கடந்து இவரது குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது

இந்நிலையில், அவரது வீட்டில் இறந்த நிலையில் வாணி ஜெயராம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?