நம்மாள்வர் - கௌரி குடும்பம் Twitter
Good News

காதலுக்காக சிறு வயதில் ஓடிய பெண், 56 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் சந்திப்பு

Antony Ajay R

16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஆந்திர பிரதேசப் பெண் 56 ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்காக அந்தச் சிறிய வயதில் வீட்டை விட்டு வெளியேறியவர் தான் கௌரி பார்வதி.

ஆந்திரபிரதேச மாநிலம், நரசிப்பட்டினம் பகுதியில் உள்ள சின்னபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரியின் உறவினர்கள் அவரைக் காண அங்கிருந்து 1300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மேலகரந்தை கிராமத்துக்கு வந்திருக்கின்றனர்.

நம்மாள்வர்- கௌரி தம்பதியினர் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள விளாத்திகுளம், மேலகரந்தையில் வசித்து வருகின்றனர்.

தற்போது 80 வயதாகும் நம்மாள்வார் 60களில் கூலி வேலைக்காக ஆந்திராவின் நரசிப்பட்டினம் பகுதிக்கு சென்றிருக்கிறார்.

"நான் நரசிப்பட்டினத்தில தங்கியிருந்த போது அங்கு உள்ள சிலரை நண்பர்களாக்கிக்கிட்டேன். அப்படி தான் கௌரிய சந்தித்தேன், நாங்க காதலிச்சோம்'.

காதலித்து வந்த நம்மாளவாரும் கௌரியும் முதன்முதலாக திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்து, கௌரி வீட்டை விட்டு ஓடி வரும் போது அவரின் குடும்பத்தினர் விஜயவாடா பேருந்து நிலையத்தில் அவர்களை கண்டுபிடித்து விட்டனர்.

அப்போது அவர்கள், இனி கௌரியை தொந்தரவு செய்யவோ, மீண்டும் நரசிப்பட்டினம் வரவோ கூடாது என்று நம்மாள்வரை மிரட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர்.

ஆனால், "இன்னும் 10 நாட்களுக்குள் மீண்டும் வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்" என கௌரி அழுதபடி கூறியது தான் நம்மாள்வரின் உள்ளத்தில் பதிந்தது.

மீண்டும் நரசிப்பட்டினம் சென்ற நம்மாள்வர் அவருக்கு முன்பே தெரிந்திருந்த ஒரு சலவைக்காரரின் மகள் மூலம் தான் வரும் செய்தியை கௌரிக்கு தெரிவித்தார்.

நம்மாள்வர் இருக்கும் இடத்துக்கு கௌரியை அழைத்து அங்கிருந்து இருவரும் மேலகரந்தை வந்தடைந்தனர். 1966ம் ஆண்டு நம்மாள்வர் - கௌரி திருமணம் நடந்துள்ளது. "அப்போது கௌரிக்கு 16 வயது எனக்கு 21. அதன் பிறகு கௌரி அவளது சொந்த ஊருக்கு செல்லவே இல்லை" என்றார் நம்மாள்வார்.

7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்திவரும் நம்மாள்வருக்கு சண்முகராஜ், அய்யம்மாள், முத்துலட்சுமி என்ற பிள்ளைகள் உள்ளனர்.

வயது முதிர்ந்த கௌரி தனது குடும்பத்தினர்களை பார்க்க வேண்டும் என தனது மகன்களிடம் அழுது கேட்டுள்ளார். 49 வயதாகும் அவரின் மூத்தமகனான சண்முகராஜ் தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சின்னபாளையம் கிராமத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது தாய்வழி உறவினர்கள் குறித்து விசாரித்து அவர்களை கண்டிபிடித்துள்ளார். "எங்க அம்மா கிராமத்தோட பேர வித்தியாசமா சொன்னதால கண்டுபிடிக்க கஷ்டமா இருந்தது. ஆனா அவங்க அக்கம்பக்கத்து கிராமத்த எல்லாம் நல்லா நியாபகம் வச்சிருந்தாங்க. கூகுள் மேப் இருக்கறதால நாங்க ஈஸியா அங்க போக முடிஞ்சிது." என்றார் சண்முகம்.

சண்முகம் கிராமத்தை சென்றடைந்த 4 மணி நேரங்களிலேயே கௌரியின் உறவினர்களை கண்டுபிடித்துவிட்டாராம். தன்னை கௌரியின் மகன் என்று கூறியது அவர்கள் மகிழ்வாக வரவேற்றதாக சண்முகம் கூறியுள்ளார்.

மறுபக்கம் கௌரியின் குடும்பத்தை வரவேற்க நம்மாள்வரின் குடும்பத்தினரும் தயாராகினர். இருக்குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதில் ஆர்வத்துடன் இருந்தனர்.

56 ஆண்டுகள் கழித்து கௌரியின் குடும்பத்தினர் அவரை சந்தித்தனர். கௌரியின் சகோதரர்கள் மஜ்ஜி சோமுலு, மஜ்ஜி தாசு மற்றும் சகோதரிகள் மாமிடி வெங்கைம்மா, கெங்கம்மா ஆகியோர் இயற்கை எய்தியிருந்தனர்.

மங்கா, ராம்பாபு ஆகிய உடன்பிறந்தவர்கள் உயிருடன் இருந்தனர். அவர்களும் கௌரியைக் காண மேலகரந்தை வந்திருக்கின்றனர்.

இந்த 56 ஆண்டுகளில் பலமுறை கௌரியை அவரது குடும்பத்தினர் தேடி அழைந்திருக்கின்றனர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பல நாட்கள் கௌரியை நினைத்து அவரது உடன் பிறந்தனர் அழுததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளத்தில் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?