IVF Twitter
ஹெல்த்

செயற்கை முறை கருத்தரித்தல் பற்றிய 5 தவறான கருத்துகள் - உண்மை என்ன?

Priyadharshini R

இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளமுடியாத தம்பதிகளுக்கு, செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ள ஒரு வாய்ப்புதான் ஐ.வி.எஃப் (IVF - In Vitro Fertilisation) எனப்படும் செயற்கை முறை கருத்தரித்தல்.

செயற்கைக் கருத்தரித்தலுக்கென உள்ள ஐ.வி.எஃப் மருத்துவ ஆய்வகங்களில், பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் விந்தணுக்களைத் தனித்தனியே பெற்று, அவற்றை இணையவைத்து, பிறகு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துகின்றனர்.

அந்தக் கரு வளர்ந்து, "டெஸ்ட் டியூப் பேபி" என்று சொல்லப்படும் ஐ.வி.எஃப் குழந்தையாகப் பிறக்கிறது.

IVF பற்றி பலரும் நம்பிக்கொண்டிருக்கின்ற தவறான கருத்துகள் இதோ!

1. IVF மூலம் நீங்கள் பல குழந்தைகளைப் பெறுவீர்கள்?

நீங்கள் IVF-ஐத் தேர்வுசெய்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் பெண்ணின் வயிற்றில் மாற்றப்படுவதால் நீங்கள் பல குழந்தைகளைப் பெறுவீர்கள் என்பது தவறான கருத்து.

2. இது செயற்கைமுறை என்பதால் குழந்தைகளுக்கு குறைபாடுகள் இருக்கும்?

IVF மூலம் பிறக்கும் குழந்தைகள் இயற்கைக்கு மாறானவை, அதனால் பிறப்பில் குறைபாடுகள் அல்லது வளர்ச்சியில் குறைபாடுகள் இருக்கும் என்பது எல்லாம் தவறான கருத்து. IVF மூலம் பிறக்கும் குழந்தைகளும், இயற்கையாக கருத்தரிக்கப்படும் குழந்தைகளைப் போலவே ஆரோக்கியமாக இருக்கும்.

pregnancy

3. IVF செயல்முறை மிகுந்த வலியை கொடுக்கும்?

மக்கள் சிலர் செயற்கை முறை கருத்தரித்தல் IVF மிகுந்த வலியையும் வேதனையும் கொடுக்கும் என நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால்

மருத்துவத்தின் முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த முறை மிகவும் மென்மையாகவும் வசதியாகவும் மாறிவிட்டது.

4. நீங்கள் எந்த வயதிலும் IVF க்கு செல்லலாம்

ஒரு பெண்ணின் கருவுறுதல் தன்மை 30 வயதை எட்டியவுடன் படிப்படியாக குறைகிறது.

இருப்பினும், அதற்கு மேற்பட்ட வயதான பெண்கள் IVF மூலம் கருத்தரிக்க மாட்டார்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.

30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் IVF மூலம் வெற்றிகரமாக கருத்தரித்த பல நிகழ்வுகள் உள்ளன. இருந்தபோதிலும் குறிப்பட்ட வயதில் இதனை மேற்கொண்டால் நல்லது.

5. பெண்களுக்கு கர்ப்பம் முழுவதும் படுக்கை ஓய்வு தேவை?

IVF செயல்முறைக்கு முட்டை சேகரிப்பு செயல்முறையின் போது சில மணிநேரங்கள் மட்டுமே தேவைப்படுகிறது மற்றும் ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.

கருத்தரிப்பு வெற்றிகரமாக முடிந்தவுடன், ஐவிஎஃப் எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு தேவைப்படும் ஓய்வு அளவு மற்ற பெண்களைப் போலவே இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?