காற்று மாசுபட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
காற்று மாசுபட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா? Twitter
ஹெல்த்

காற்று மாசுபட்டால் ஏற்படும் மறைமுக உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

Priyadharshini R

உலகெங்கிலும் உள்ள தனிநபர்களையும் சமூகங்களையும் பாதிக்கும் சுற்றுச்சூழல் கேடு தான், காற்று மாசுபாடு. தொழில்துறை செயல்முறைகள், போக்குவரத்து மற்றும் இயற்கை காரணிகள் என பல்வேறு விஷயங்களில் இருந்து மாசுக்கள் வெளியிடப்படுகிறது.

டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு அதிகமாக இருக்கிறது. தீபாவளி பட்டாசுகள் குறைந்த நேரம் மட்டுமே வெடித்தாலும், அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காற்றில் மாசு கலந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

அதிக காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகள் குறித்தும், அது நம் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

காற்று மாசுபாடு, சுவாச பிரச்னைகளுக்கு மட்டும் வழிவகுக்காமல், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுவாச பிரச்னைகள்

மாசுபட்ட காற்று ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சுவாசப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பொதுவான காற்று மாசுபாடுகள், சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி, வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

நுரையீரல் புற்றுநோய்

அதிக காற்று மாசுக்கள் இருப்பின் நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு கூடுதல் ஆபாயம் ஏற்படும், அதாவது புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள்.

இருதய பிரச்னை

காற்று மாசுபாடு என்பது சுவாசப் பிரச்சனைகள் மட்டும் அல்ல; இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

மனநல கவலைகள்

காற்று மாசுபாடு, மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. இது அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றும் நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

தடுக்கும் முறை

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என தனிநபர்கள் அதிக காற்று மாசுபாட்டின் மோசமான உடல்நல விளைவுகளுக்கு பாதிக்கப்படுகின்றனர்.

காற்று மாசுபாட்டின் விளைவுகளைத் தணிக்க, அதன் காரணிகளை குறைப்பதற்கும், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கும், காற்றின் தரக் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதற்கும் கூட்டு முயற்சிகள் தேவை. ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் மட்டுமே அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?