72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா?
72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா? canva
ஹெல்த்

72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா?

Priyadharshini R

நம்மில் பெரும்பாலானோர் டையட் என்றாலே பழங்கள், காய்கறிகள் மட்டும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வேறு ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் அதே சமயம் புரதச்சத்து உணவுகள், கொழுப்பு சத்து உணவுகளை அரவே தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவில்லை தானே, நமது உணவு பழக்கவழக்கங்களில் எல்லா வகையான சத்துகளை சீராக எடுத்துக்கொள்வது நல்லது. காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில் சத்துள்ள பிற உணவுகளையும் நாம் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பழங்களையே உணவாக உட்கொண்டு வருகின்றனர். ஆனால் பழங்களை மட்டும் 3 நாட்கள் அதாவது தொடர்ந்து 72 மணி நேரம் எடுத்துக்கொண்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

72 மணி நேரம் பழங்களை மட்டுமே உட்கொள்வது உங்கள் உடலில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

நேர்மறை விளைவுகள்

பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்தவும், ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பங்களிக்கின்றன. பழங்களில் உள்ள அதிக நீர்ச்சத்து நீரேற்றத்திற்கும் உதவுகிறது.

எதிர்மறை விளைவுகள்

பழங்களை மட்டுமே நம்பியிருப்பது பல்வேறு உடல்நல சவால்களுக்கு வழிவகுக்கும். பழங்கள் கொண்ட உணவில் புரதம், கொழுப்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம். ஹார்மோன் உற்பத்தி உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு கொழுப்புகள் அவசியமாகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் இருந்தால் தசை இழப்பு, சோர்வு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும்.

மேலும் பழங்களில் அதிகமான சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், பழங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

எடை அதிகரிப்பு

சிலர் ஆரம்பத்தில் எடை இழப்பை சந்திக்க நேரிடும் போது, பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

நீரிழிவு

சர்க்கரை நோய் உள்ள நபர்கள் பழ உணவுகளில் அதிக இயற்கை சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது இரத்தத்தின் சர்க்கரை அளவை பாதிக்கும். கணையம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கும் இது ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.

பல் சிதைவு

பழங்களில் உள்ள அதிக சர்க்கரை உள்ளடக்கம், அவற்றின் அமிலத்தன்மையுடன் இணைந்து, பல் சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடுகள்

பழ உணவுகள் வைட்டமின் பி 12, கால்சியம், வைட்டமின் டி, அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களில் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். இந்த குறைபாடுகள் இரத்த சோகை, சோர்வு ஆகியவைகளை ஏற்படுத்தலாம்.

வீக்கம் பிரச்சினைகள்

பிரக்டோஸ் ( பழச் சர்க்கரை ) நிறைந்த பழங்கள் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வாயு மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

பசியைத் தூண்டும்

பழங்களை உட்கொள்வது தற்காலிக திருப்திக்கு வழிவகுக்கும், ஆனால் தொடர்ந்து புரதம் மற்றும் கொழுப்பு இல்லாத பழங்களைச் சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டபடி பாதித்து, பசியைத் தூண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?