திருமணம் Canva
இந்தியா

திருமணம் ஆன 45 நாட்களில் தங்க நகைகளுடன் முன்னாள் காதலனுடன் சென்ற பெண் - என்ன நடந்தது?

Antony Ajay R

திருமணமான பெண் ஒருவர் மற்றவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபயர் பற்றிய செய்திகளை நாம் தினசரி கேட்டு வருகிறோம்.

திருமணம் ஆன புதிதில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிக அரிது தான். ஆனால் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்த பெண்ணின் கதை மிக வித்தியாசமானதாக இருக்கிறது.

20 வயதாகும் அவர் காதலித்து தனது குடும்பத்தினருடன் சண்டையிட்டு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அடுத்த 45 நாட்களில் அவரிடமிருந்து பணம் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கொள்ளை சம்பவம் நடப்பதற்கு 45 நாட்கள் முன்னர் சத்யாநந்த் மற்றும் ராணி குமாரி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் அறிமுகமாகியுள்ளனர். ஆரம்பத்திலேயே காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இரவு பொழுதுகளில் போன் பேசி இவர்களின் காதல் வளர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்வதாக வீட்டில் கூறியிருக்கின்றனர். குடும்பத்தினர் அனுமதிக்காததால் ”ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழ முடியாது” என ஆர்பாட்டம் செய்து இறுதியாக கடந்த ஏப்ரல் 27 -ல் திருமணம் செய்துகொண்டனர்.

இங்கு தான் ஒரு ட்விஸ்ட்

திருமணம் ஆன புதிதில் அந்த பெண் மற்றொரு ஆணுடன் இரவு நேரங்களில் பேசிக்கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். அது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது, தான் வேறு ஒருவருடன் வாழ விரும்புவதாக கூறியிருக்கிறார்.

இதனால் இருவருக்குள்ளும் சண்டை வர, இரவில் கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது 20000 ஆயிரம் ரூபாய் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு அந்த பெண் இன்னொரு காதலருடன் சென்றுள்ளார்.

இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?