நாகப்பாம்பு canva
இந்தியா

தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்து கொன்ற 8 வயது சிறுவன் - எங்கே?

Keerthanaa R

8 வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் சத்தீஸ்கரில் நிகழ்ந்துள்ளது.

தன்னைக் கடித்த பாம்பை கடித்து கொன்ற இரண்டு வயது சிறுமியை பற்றி சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகியிருந்தது. அப்படி சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் என்ற 8 வயது சிறுவன் நாகப்பாம்பு ஒன்றை கடித்து கொன்றுள்ளார்.

அந்த பாம்பு தீபக்கின் கையில் இருக சுற்றிக்கொண்டு அவனை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கையை உதரியுள்ளார், ஆனால் பாம்பு விடவில்லை. இதனால் சிறுவன் அந்த பாம்பை இரு முறை கடித்துள்ளார். இதில் அந்த பாம்பு இறந்துள்ளது. பின்னர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

சிறுவனைப் பாம்பு கடித்தபோது, அதிர்ஷ்டவசமாக விஷம் வெளியேறவில்லை. ஆனால், இதுபோன்ற பாம்புக் கடிகள் வலி நிறைந்தவையாக இருக்கும் எனவும் பாம்பு கடித்த பகுதியை சுற்றி மட்டுமே அறிகுறிகள் இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?