மாதவிடாய் நாட்களில் பெண்களை  காட்டுக்கு அனுப்பும் கிராமம் - இந்த வழக்கம் எப்படி வந்தது?
மாதவிடாய் நாட்களில் பெண்களை காட்டுக்கு அனுப்பும் கிராமம் - இந்த வழக்கம் எப்படி வந்தது? Twitter
இந்தியா

மாதவிடாய் நாட்களில் பெண்களை காட்டுக்கு அனுப்பும் கிராமம் - இந்த வழக்கம் எப்படி வந்தது?

Priyadharshini R

என்ன தான் நாகரீகம் வளர்ந்தாலும், இன்றும் சிலர் பழமைவாதிகளாகவே இருக்கின்றனர். குறிப்பாக இன்னும் பல வீடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண்களை ஒதுக்கி வைக்கின்றனர்.

தனி பாத்திரம், தனி போர்வை என அவர்கள் மீது தீண்டாமை திணிக்கப்படுகிறது. சில கிராமங்களில் ஒரு படி மேலே சென்று வீட்டை வீட்டு காட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

வயல்வெளியில் அவர்கள் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். எங்கே இந்த அவல நிலை உள்ளது என்று விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகேயுள்ள உரிநயனப்பள்ளி, உரிநயனிக்கோட்டூர், பாளையம், சாலர்லப்பள்ளி ஆகிய கிராமங்களில் இதுபோன்ற வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏகலநத்தம் என்ற கிராமத்திலும் இந்த அவலநிலை தொடர்கிறது.

ஏகலநத்தம் என்ற மலைக் கிராமத்தில் 200 வீடுகள் உள்ளன. அதில் சுமார் 900 பேர் வசிக்கின்றனர்.

காட்டுக்குள் பெண்கள்

காட்டுக்குள் பெண்கள் தங்கும் வகையில் சில குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதவிடாய் நாட்களில் பெண்கள் அந்த குடிசைகளில் தங்குகின்றனர்

பகல் நேரத்தில், மலைக்கு அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, அங்கேயே தங்கி வயல்வெளியில் சமைத்து சாப்பிடுகின்றனர் இந்த பெண்கள்.

இப்படித்தான் 4 நாட்களுக்கு கிராமத்தையும், தங்களின் வீடுகளையும் விட்டு வெளியே அனுப்பி வைக்கப்பட்டு மலைகளில் தங்குகின்றனர்.

வெயில், மழை என எல்லா காலநிலையிலும் பெண்களுக்கு இந்த நிலை தான் தொடர்கிறது.

மழை பெய்தால் மரத்தடியில் அல்லது பாறைக்கு கீழே இருப்பார்களாம். அப்படி தங்கும் போது பாம்பு, தேள் போன்றவை கூட வருமாம்.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அந்த கிராமங்களில் இருக்கும் பெண்கள் அதனை அனுபவித்து வருகின்றனர். பிறந்தது முதல் இறப்பது வரை இதே வழக்கம் இங்கு தொடர்கிறது என்று அங்கு வசிக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

வெளியூரிலிருந்து இந்த கிராமங்களுக்கு திருமணம் ஆகி வரும் பெண்களுக்கு இந்த வழக்கம் எல்லாம் வித்தியாசமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் அவர்கள் அதுவரை பூஜை அறைக்குள் தான் செல்லமாட்டார்கள், இது சற்று வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது என்று அந்த பெண்கள் கூறுகின்றனர்.

இந்த வழக்கம் எப்படி வந்தது?

விவசாயத்தையே நம்பி இருக்கும் இந்த மலைக்கிராமங்களில் இன்றும் மக்கள் செருப்பு அணிவதில்லை.

ஒரு முறை ஊரில் நடந்த திருவிழாவில் மாதவிடாயுடன் ஒரு பெண் இருந்ததால் கடவுளுக்கு அடிக்கும் மேளம் உடைந்ததாக கூறப்படுகிறது.

அன்றிலிருந்து ஊர் பெரியவர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனராம். மாதவிடாய் உள்ள பெண்கள் கிராமத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று விதி இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த கிராமங்களில் தொடரும் பழக்கவழக்கங்களை மாற்ற சில முயற்சிகளை எடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?

”நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - கல்வி விருது விழாவில் விஜய் பேசியது என்ன?

அமெரிக்கா: வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!