அடல் சேது பாலம்  ANI
இந்தியா

"அடல் சேது பாலம் சுற்றுலா தலம் அல்ல" - எச்சரிக்கும் மும்பை போலீசார்

Priyadharshini R

இந்தியாவிலேயே நீளமான பாலம் மும்பையில் கட்டப்பட்டுள்ளது.

அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி-நவ ஷேவா அடல் சேது என இந்த பாலத்துக்கு பெயரிட்டுள்ளனர். இதனை அடல் - சேது என அழைக்கின்றனர். இது உலக அளவில் 12வது நீளமான பாலமாக திகழும் என கூறப்பட்டுள்ளது. 21.8 கிலோ மீட்டர் நீளமான இந்த பாலத்தை 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளனர்.

இந்த பாலத்தை கண்டு ரசிக்க ஏராளமான மக்கள் அங்கு குவிகின்றனர்.

சமீபத்தில் கூட அந்த பாலத்தில் பல கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடல் சேது பாலம், பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், வாகனங்களை பாலத்தில் நிறுத்துவதும், அங்கு நின்று புகைப்படம் எடுப்பதும் சட்டவிரோதமானது. இவ்வாறு செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?