அயோத்தி : இராமர் கோவில் முதல் புதிய நகரம் வரை - 10 ஆண்டுகளில் 85,000 கோடி பெறும் நகரம்! Twitter
இந்தியா

அயோத்தி : இராமர் கோவில் முதல் புதிய நகரம் வரை - 10 ஆண்டுகளில் 85,000 கோடி பெறும் நகரம்!

Antony Ajay R

அயோத்தில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. அடுத்த மாதம் அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.

அயோத்தியை இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாள நகரமாக மாற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது அரசு.

அந்த வகையில் அயோத்தி நகரை மறு சீரமைக்க 85,000 கோடி செலவிடப்பட உள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது.

இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு இதற்கான பணிகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் பகுதியாக அயோத்தியில் புதிய நகரம் உருவாக்கப்படுகிறது. தினசரி 3 லட்சம் பயணிகள்/யாத்திரீகர்கள் வந்தும் செல்லும் வசதியுடைய நகராக அயோத்தி உருவாக்கப்படும்.

சுற்றுலாப்பயணிகளின் அதிகப்படியான வருகை உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் நகரம் வடிவமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகள் பணிகள் நடப்பதற்கான திட்டங்கள் இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?