”ரஜினிகாந்த் ஜீரோ இப்போ ஆகிட்டாரு” கொந்தளித்த ரோஜா - என்ன பேசினார்? Twitter
இந்தியா

”ரஜினிகாந்த் இப்போ ஜீரோ ஆகிட்டாரு” கொந்தளித்த ரோஜா - என்ன பேசினார்?

Priyadharshini R

அரசியலுக்கு வரமால் அரசியல் பேசக் கூடாது என ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் ரோஜா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கெங்கை வராக நதீஸ்வரர் கோயில் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா நடைபெற்று வருகிறது.

கங்கா ஆரத்தி நிகழ்வில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரோஜா ரஜினிகாந்த் குறித்து பேசியது தற்போது பரபரப்பாகியுள்ளது.

" ஜெகன்மோகன் ரெட்டியை தோற்கடிக்க சந்திரபாபு நாயுடு முதலில் பவன் கல்யாணை பயன்படுத்தினார். அவரால் ஒன்றும் முடியவில்லை. இப்போது ரஜினிகாந்தை இழுக்கப்பார்க்கிறார். அதனை ரஜினிகாந்த் தெரிந்துகொண்டால் நல்லது"
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என்று நினைத்த பிறகு அரசியல் பேசக்கூடாது. என்டி ராமராவை எல்லோரும் கடவுளாக பார்ப்பார்கள். கிருஷ்ணர் என்றால் என்டிஆர் என்று நாங்கள் அவரை பார்த்துள்ளோம்.

அவரை எப்படி கொன்றார்கள், அவரது மரணத்திற்கு காரணம் சந்திரபாபு நாயுடு தான் என்பது ரஜினிகாந்துக்கு தெரியும். நான் நினைத்தேன் ரஜினிகாந்த் தெரியாமல் தவறாக பேசிவிட்டார் என்று. ஆனால் தெரிந்தே தவறாக பேசியுள்ளார் என்பது தான் கஷ்டமாக இருக்கிறது.

தெலுங்கர்கள் ரஜினிகாந்தை ஒரு சூப்பர் ஸ்டாராக, நல்ல நடிகராக பார்த்தனர். ஆனால் அவர் பேசியதை பார்த்து அனைவரும் கோபத்தோடு இருக்கின்றனர். ஏனென்றால் என்டி ராமாராவை யார் கொலை செய்ய திட்டம் போட்டாரோ அவரை நல்லவர் என்று சொன்னது மட்டுமின்றி, மேலே இருந்து ஆசி வழங்குவார் என்று சொன்னது பெரிய தவறு.

அரசியலுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் இல்லாதபோது, தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு அழைத்தார், சாப்பாடு போட்டார், ஒரு ஸ்கிரிப்டை கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு அந்த ஸ்கிரிப்டை படித்துவிட்டு அப்படியே சொல்வது சரியல்ல.

ரஜினிகாந்த் என்றால் பெரிய அளவில் பார்த்தோம். ஆனால் இன்று அவர் ஜீரோவாக ஆகிவிட்டார். இது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.

ஜெகன்மோகன் ரெட்டி போன்ற முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தான் எல்லோருக்கும் ஒரு அண்ணன், தம்பி.

Roja

அனைவரையும் சகோதரியாக நினைத்து சீர்வரிசை கொடுத்து வருகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டியை தோற்கடிக்க சந்திரபாபு நாயுடு முதலில் பவன் கல்யாணை பயன்படுத்தினார். அவரால் ஒன்றும் முடியவில்லை.

இப்போது ரஜினிகாந்தை இழுக்கப்பார்க்கிறார். அதனை ரஜினிகாந்த் தெரிந்துகொண்டால் நல்லது. யார் சேர்ந்து வந்தாலும், தனித்னியே வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றும் செய்ய முடியாது”

இவ்வாறு ரோஜா ஆவேசமாக பேட்டியளித்திருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?