Crashed Training Chopper Twitter
இந்தியா

Chhattisgarh : ராய்பூரில் ஹெலிகாப்டர் விபத்து- 2 விமானிகள் பலி

Keerthanaa R

நேற்றிரவு சத்திஸ்கர் மாநிலம், ராய்பூர் நகரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறியது. இதில் விமானிகள் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் ஸ்ரீவாஸ்தவா பலியாகினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் ஹெலிகாப்டரில் இல்லாததால் பெறும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் வழக்கமான விமான பயிற்சி மேற்கொள்ளப்பட்ட போது, சுமார் 9.10 மணியளவில், விபத்து ஏற்பட்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த விமானிகள் இருவரும் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA)-வுடன் சத்தீஸ்கர் அரசாங்கம் இணைந்து விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.

இறந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?