500 மாணவிகளை பார்த்து மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன் - எங்கே? என்ன நடந்தது? twitter
இந்தியா

தேர்வு அறை : 500 மாணவிகளை பார்த்து மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன் - என்ன நடந்தது?

Keerthanaa R

500 மாணவிகளுக்கு மத்தியில் அமர்ந்து தேர்வெழுதப்போவதை அறிந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பயந்து மயங்கி விழுந்துள்ள சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏஎன்ஐ தளத்தின் அறிக்கையின் படி, சங்கர் என்ற மாணவன் ஷரீப் அலாமா இக்பால் கல்லூரியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வேறொரு பள்ளிக்கு பொதுத்தேர்வு எழுத சென்றுள்ளார்.

தேர்வு மையத்தில், தன்னை தவிர அனைவருமே மாணவிகள் என்பதை அறிந்த மாணவர் சற்றே அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயம் ஏற்பட்டு, தேர்வு மையத்திலேயே மயங்கி விழுந்துள்ளார் சங்கர்.

துரிதமாக செயல்பட்டு மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மாணவனுக்கு காய்ச்சலும் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார் சங்கர். அவரது உடல்நிலை சற்று தேறியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மாணவரை கவனித்துக் கொள்ள அவரது உறவினர் பெண் ஒருவர் உடன் இருக்கிறார். அவர் இந்த சம்பவம் குறித்து பேசிய வீடியோ இன்ணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அம்மாணவனுக்காக அனுதாபப்பட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?