கெஜ்ரிவாலுடன் பக்வந்த் மான்

 

Twitter

இந்தியா

பஞ்சாப் முதல்வராகும் ஒரு காமெடி நடிகர்; "பக்வந்த் மான்" மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்

Antony Ajay R

காமடி தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பஞ்சாப் மக்களுக்கு அறிமுகமானவர் பக்வந்த் மான். தற்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் நின்று பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார்.

எல்லா கட்சியையும் போல் இல்லாமல் ஆம் ஆத்மியில் வித்யாசமான முறையில் முதல் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பக்வந்த் மான். பொது மக்களுக்கு மொபைல் நம்பர் கொடுத்து அதன் மூலம் வாக்களிக்கச் செய்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த மக்களே தற்போது முதல்வராகவும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மானை நேரடியாக முதல் வேட்பாளர் என கெஜ்ரிவால் அறிவப்பதாக இருந்ததாம். ஆனால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள் என மறுத்துவிட்டாராம் பக்வந்த் மான்.

கெஜ்ரிவாலுடன் பக்வந்த் மான்

அரசியலில் சரிவும் நிமிர்வும்

1973-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி பிறந்த பக்வந்த் மான் மிகவும் எளிமையானவராக அடையாளம் காணப்பட்டார், ஜூக்னு கெஹந்தா ஹை மற்றும் ஜுக்னு மஸ்த் மஸ்த் ஆகிய இரு நிகழ்ச்சிகள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். 2012-ம் ஆண்டு டிவி நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த புகழை பயன்படுத்தி மக்கள் கட்சி சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறி டெல்லியில் ஆட்சியை பிடித்த அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் 2014ம் ஆண்டு பக்வந்த் மான் இணைந்தார். அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சங்ருர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் மோடி அலை வீசிய போதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி நான்கு தொகுதியில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

காமடியனாக பக்வந்த் மான்

தியாகமும்... தொண்டும்...

மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்று இருந்தாலும் அதிகமாக மது அருந்தக்கூடியவர் என்று அனைவராலும் குற்றம் சாட்டப்பட்டார். குடிகாரர் என்றே சிலர் அவரை அழைத்தனர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது கூட மது அருந்திவிட்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது. மதுவால் தனக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதை உணர்ந்த பக்வந்த் மான் 2019ம் ஆண்டு இனி தான் மது அருந்தமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அரசு பள்ளி ஆசிரியரின் மகனான பக்வந்த் மானை அவரின் தந்தை ஆசிரியராக்கி பார்க்கவேண்டும் என்றே விரும்பினார். ஆனால் மானின் விருப்பம் வேறு மாதிரி இருந்தது. எப்போது கலகலவென சிரித்து காமெடி, கிண்டலுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்த பக்வந்த் மான் அதன் மூலமே புகழ் பெற்று பஞ்சாப்பின் முதல்வர் வேட்பாளராகி இருக்கிறார்.

பஞ்சாப் எல்லையில் மாசுபட்ட நிலத்தடி நீரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக மான் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கணிசமாக வெற்றி பெறச்செய்ததிலும் பக்வந்த் மான் முக்கிய பங்கு வகித்தார். ஊழல் விவகாரத்தில் பக்வந்த் மான் எந்த வித சமரசமும் செய்து கொள்ள மாட்டார் என்கிறார்கள்.

பக்வந்த் மான் தனது மனைவியை பிரிந்து 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். நடந்து முடிந்துள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப்பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பில் ஆட்சியமைக்கிறது. மக்களால் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளராக செய்யப்பட்ட பக்வந்த் மான் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?