How Experts Will Determine If Gyanvapi Mosque Was Built On A Temple Twitter
இந்தியா

கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதா? ஆய்வை தொடங்கிய தொல்லியல்துறை - எங்கே?

தொல்லியல்துறை குழுவுடன் மகுதிக்குள் இருந்த இந்து தரப்பு மனுதாரர்கள் கூறுகையில் மகுதிக்குள் காலை 7 மணிக்கு ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய நிபுணர்கள், இஸ்லாமியர்களின் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 12 மணி முதல் 2 மணி நேரம் ஆய்வு பணியை நிறுத்தினர் என்றார்.

Priyadharshini R

அலகாபாத் உயர்நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மகுதியில் ஆய்வுப் பணிகளை தொல்வியல் துறை மீண்டும் தொடங்கியது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோயில் இருந்ததாகவும் அந்த மசூதிக்குள் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த வேண்டும் என்றும் இந்துக்கள் சிலர் வாரணாசி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஜூலை 21ம் தேதி உத்தரவிட்டது இதனை தொடர்ந்து ஜூலை 24ம் தேதி தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் தொல்லியல்துறை ஆய்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.

அந்த மனுவில் எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்வதற்குக்கூட கால அவகாசம் அளிக்காமல் மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மசூதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஜூலை 26ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும் இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் தொல்லியல் துறை ஆய்வை தொடர அனுமதி வழங்கியது.

மகுதியில் ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் முறையான உத்தரவையே பிறப்பித்துள்ளது. அதில் தலையிட எந்தவித அவசியமும் இல்லை. இந்த ஆய்வின்போது தோண்டும் பணிகள் எதையும் மகுதியில் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டதுடன் மசூதி குழு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, தொல்லியில் துறை நிபுணர்கள் மசூதியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆய்வுப் பணிகளைத் தொடங்கினர்.

இதுகுறித்து தொல்லியல்துறை குழுவுடன் மகுதிக்குள் இருந்த இந்து தரப்பு மனுதாரர்கள் கூறுகையில் மகுதிக்குள் காலை 7 மணிக்கு ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய நிபுணர்கள், இஸ்லாமியர்களின் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 12 மணி முதல் 2 மணி நேரம் ஆய்வு பணியை நிறுத்தினர். ஆய்வுப் பணி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும்தொடங்கப்பட்டது. இந்த ஆய்வுப் பணி 5 முதல் 6 நாள்கள் வரை தொடர வாய்ப்புள்ளது என்றார்.

இதற்கிடையில் மசூதியில் அறிவியல் பூர்வ ஆய்வு பணிகளை நிறைவு செய்ய தொல்லியல் துறைக்கு கூடுதலாக நான்கு வார அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை காரணமாக மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு பணிகள் நடத்த ஜூலை 24ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. எனவே ஆய்வு பணிகளை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டுமென கூறி தொல்லியல் துறை தரப்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி தொல்லியல் துறை கோரிக்கையை ஏற்றார்.

அதன்படி மசூதியில் ஆய்வு பணிகளை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 4 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 4ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?