பசிக்கொடுமையில் இந்தியாவுக்கு 107வது இடம்! Twitter
இந்தியா

பசிக்கொடுமை: பாகிஸ்தான், இலங்கையை விட பின்தங்கிய இந்தியா - பதறவைக்கும் GHI அறிக்கை!

Antony Ajay R

வளர்ந்த நாடுகளுடன் இந்தியா பொருளாதாரத்தில் போட்டிப் போட்டுக்கொண்டிருக்க, பசிக்கொடுமை பற்றி குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை நம்மை அதிரவைக்கிறது.

இந்தியக் குழந்தைகள் பசியினால் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இந்த அறிக்கைக் காட்டுகிறது.

குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் பசியின் தீவிரத்தை ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை மற்றும் குழந்தை இறப்பு ஆகிய காரணிகளை கொண்டு ஆராய்கிறது.

இதன் அடிப்படையில் நாடுகளுக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 100 வரை மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது. 0 மதிப்பெண் பெறும் நாடு பசியில்லாத நாடாகவும் 100 மதிப்பெண் வாங்கும் நாடு பசிக்கொடுமையின் உச்சத்தில் இருப்பதாகவும் எடுத்திக்கொள்ள வேண்டும்.

இதில் இந்தியா 29.1 மதிப்பெண் பெற்றுள்ளது. இது தீவிர பசிக்கொடுமை என்ற அளவீட்டில் வருகிறது. ஏனெனில் உலக அளவில் 121 நாடுகளை கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 107வது நாடாக தான் இந்தியா இருக்கிறது.

பொருளாதார சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளும் அண்டை நாடான வங்காள தேசமும் கூட தங்கள் மக்களுக்கு இந்தியாவை விட சிறப்பாக உணவு வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

போரில் இருந்து மீண்டு வந்த ஆப்கானிஸ்தான் 109வது இடத்தில் இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட பின் தங்கிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு தற்போது நேரடி எதிரி நாடாக கருதப்படும் சீனாவின் மதிப்பெண் 5க்கும் குறைவு. தங்களது நாட்டு மக்களுக்கு நல்ல உணவளிக்கும் நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் முதல் 17 இடத்துக்குள் சீனா இடம் பிடித்துள்ளது. அதாவது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 90 நாடுகள் இருக்கின்றன!

குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதில் இந்தியாவில் 19.3 விழுக்காடு. உலகிலேயே மோசமான இடத்தில் இந்தியா இருக்கிறது. இது இந்தியாவின் கடந்த 2000 (17.15%) மற்றும் 2014 (15.1%) அளவீடுகளை விட அதிகம்.

இதே வேளையில் குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மற்றும் பசியால் குழந்தைகள் இறப்பது இந்தியாவில் குறைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

குளோபல் ஹங்கர் இன்டெக்ஸின் அளவீட்டுக்கான தரவுகள் ஐந்து ஆண்டுகள் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. இப்போது வெளியாகியிருக்கும் அளவீடு 2017ம் ஆண்டு முதல் 2021வரை எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலானது.

உலக அளவில் குளோபல் இன்டெக்ஸ் மதிப்பெண் 2014ம் ஆண்டு 19.1% 2022ல் 18.2% இது மிகச் சிறிய அளவிலான முன்னேற்றம் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். போர்கள், காலநிலை மாற்றம் மற்றும் கோவிட் 19 பசிக்கு எதிரான போரை மட்டுப்படுத்தியிருக்கின்றன. 2023ம் ஆண்டு இன்னும் மோசமான நிலையை நாம் அடையலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆய்வுகளின் படி இந்தியா உள்ளிட்ட 44 நாடுகள் மிக மோசமான, தீவிர பசிக்கொடுமையில் இருக்கின்றன. 46 நாடுகள் பசிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?