கேரளா, தமிழகத்துக்கு 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்! Twitter
இந்தியா

கேரளா, தமிழகத்துக்கு 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்!

Priyadharshini R

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'கள்ளக்கடல்' நிகழ்வு காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறிகள் எதுவும் இல்லாமல் திடீரென கடல் சீற்றம் அடைவது, 'கள்ளக்கடல்' நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. திருடனை போல சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருவதால், கேரள மக்கள் இதை, கள்ளக்கடல் என அழைக்கின்றனர்.

கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) "கள்ளக்கடல் நிகழ்வு" குறித்து மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் சீற்றம் வலுப்பெற வாய்ப்புள்ளதால் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அபாயப் பகுதிகளிலிருந்து விலகி இருக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்கடல் நிகழ்வு இந்தியாவின் தெற்கு கடற்கரையோரத்திற்கு புதிதல்ல, இது பொதுவாக பருவமழைக்கு முந்தைய வாரங்களில் நடக்கும். இது ஒரு சில நாட்கள் வரை நீடிக்கும். கடலின் நீர்மட்டம் அதிகபட்சமாக 3-4 மீ வரை உயரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?