Little girl celebrates her father's new job at Swiggy Twitter
இந்தியா

ஸ்விக்கியில் வேலை! தந்தையை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விடும் மகள் | Viral Video

Priyadharshini R

ஸ்விக்கியில் வேலை கிடைத்துள்ள தந்தையை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விடும் சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தற்போது வைரலாகி வரும் வீடியோ தந்தை மகள் பந்தத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

ஸ்விக்கியில் வேலை கிடைத்துள்ள தந்தையை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விடும் சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பூஜா அவந்திகா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மனதைக் கவரும் அந்த வீடியோவில் ஒரு சிறுமி கண்களை மூடிக்கொண்டு நிற்கிறாள், ஸ்விக்கி முத்திரை பதித்த சட்டையுடன் தந்தை அவள் முன் நிற்கிறார்.

அந்த சிறுமி தன் கண்களைத் திறந்து பார்த்த போது, தந்தைக்கு ஸ்விக்கியில் புதிய வேலை கிடைத்ததை உணர்ந்தாள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தவள், தன் தந்தையை அணைத்து நெகிழ்ந்தாள்.

இந்த வீடியோ இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன் மில்லியன் பார்வைகளை பெற்று வருகிறது.

சிறுமியின் இந்த செயலை கண்டு நெட்டிசன்கள் நெகிழ்ந்து தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?