samosa  Twitter
இந்தியா

Madhya Pradesh : அனுமதியின்றி சமோசா எடுத்து சாப்பிட்ட நபர் அடித்துக் கொலை - நடந்தது என்ன?

Priyadharshini R

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சங்கர் நகரில் சோலா எனும் பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பத்தன்று உணவகத்தில் நுழைந்த வினோத் அஹிர்வர் என்ற நபர், கடைக்காரரின் அனுமதியின்றி சமோசாவை எடுத்துச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

மது போதையில் கடையினுள் வந்து, அனுமதி இன்றி சமோசாவை எடுத்துச் சாப்பிட்ட சம்பவம் கடையில் இருந்த உரிமையாளர் ஹரி சிங் அஹிர்வாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அருகிலிருந்த கம்பை எடுத்து மகன் உதவியுடன் கடைக்காரர், வினோத் தலையில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வினோத் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சமோசா கடை உரிமையாளர் ஹரி சிங் அஹிர்வார் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?