மத்திய பிரதேசத்திற்கு புதிதாக வரவுள்ள 2 விமான நிலையங்கள்! Twitter
இந்தியா

மத்திய பிரதேசத்திற்கு புதிதாக வரவுள்ள 2 விமான நிலையங்கள்!

Priyadharshini R

மிக விரைவில் மத்திய பிரதேசத்தில் குணா மற்றும் ஷிவ்புரியில் இரண்டு புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்த அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டார். விமான இணைப்பை மேம்படுத்த இரண்டு புதிய விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அமைச்சர் வெளியிட்டார். இந்த விமான நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் விமானப் பயணத்திற்கான அணுகலை மேம்படுத்தவும், குணா மற்றும் ஷிவ்புரி நகரங்களில் வசிப்பவர்களுக்கு பிராந்திய இணைப்பை அதிகரிக்கவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையங்கள் மத்திய பிரதேசத்தில் விமான இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போபால், ஷிவ்புரி, குணா மற்றும் அண்டை பகுதிகளில் வசிப்பவர்கள் நேரடியாக இதன் மூலம் பயனடைவார்கள். மேலும் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் இணைப்புத் திட்டமான உடானின் கீழ் இந்த இரட்டை விமான நிலையங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குறிப்பிட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?