செல்போனிலிருந்து 1 மணி நேரம் விடுபடும் கிராம் ( Rep) Twitter
இந்தியா

செல்ஃபோன், டிவி நோ! 1.30 மணி நேரம் கேட்ஜட்களுக்கு Goodbye சொல்லும் ஒரு அடடே கிராமம்

Priyadharshini R

டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாத விஷயங்களான மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விடுபட ஒரு முயற்சியைக் கையில் எடுத்து தவறாமல் கடைப்பிடித்து வருகிறது ஒரு அழகிய கிராமம்.

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மொஹித்யாஞ்சே வட்கான் கிராமம், நவீன வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்கும் மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களிலிருந்து விடுபட தினமும் 1.30 மணி நேரம் ஒதுக்குவதாகவும், அதனைத் தவறாமல் கடைப்பிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமும் மாலை 7 மணிக்கு சைரன் ஒலிக்கிறது. இதனை தொடர்ந்து கிராமமக்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற கேஜெட்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடுகின்றனர்.

டிஜிட்டல் டிடாக்ஸ்

வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்திவிட்டு, புத்தகங்கள் படிப்பது, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட, இரண்டாவது அலாரம் 8.30 மணிக்கு ஒலிக்கிறது.

அதன்பிறகு தங்களின் மொபைல் போன்கள், கேஜெட்களை பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த யோசனையை மொஹித்யாஞ்சே வட்கான் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் விஜய் மோஹித் முன்வைத்தார்.

Using Mobile

மொபைல் போன்களில் மூழ்கியிருந்த குழந்தைகள்

இது குறித்து பேசிய மோஹித், கொரோனா வைரஸால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவானது. பள்ளி படிக்கும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புக்காக பல மணிநேரம் மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தனர்.

அதே நேரத்தில் பெற்றோரின் தொலைக்காட்சி பார்க்கும் நேரம் நீண்டது. வகுப்புகள் மீண்டும் தொடங்கும் போது, ​​ஆசிரியர்கள் குழந்தைகள் சோம்பேறிகளாகிவிட்டதை உணர்ந்தனர்.

படிக்கவும், எழுதவும், விரும்பவில்லை மற்றும் பள்ளி நேரத்திற்கு முன்னும் பின்னும் பெரும்பாலும் மொபைல் போன்களில் மூழ்கியிருந்தனர்.

கிராம மக்களின் வீடுகளில் தனிப் படிப்பு அறைகள் இல்லை. எனவே ”நான் டிஜிட்டல் டீடாக்ஸ் யோசனையை முன்வைத்தேன் ”என்று அவர் கூறினார்.

முதலில் தயங்கிய கிராம மக்கள்

இதற்காக முதலில் ஒன்றரை மணிநேரத்தை வலியுறுத்தினோம், மொபைல் மற்றும் டிவி திரைகளில் இருந்து விலகி இருக்க முடியுமா என்று மக்கள் மத்தியில் ஒரு யோசனை, தயக்கம் இருந்தது.

சுதந்திர தினத்தன்று பெண்களின் கிராம சபையைக் கூட்டி சைரன் வாங்க முடிவு செய்தோம்.

பின்னர் அங்கன்வாடி சேவிகர்கள், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று ”டிஜிட்டல் டீடாக்ஸ்” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

டிஜிட்டல் நோன்பு

அதன்படி தினமும் மாலை 7 மணிக்கு சைரன் ஒலித்த உடன் கிராமமக்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற கேஜெட்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர்.

இம்முயற்சி செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது, என மோஹித் விளக்கினார்.

இதே போன்று இந்த மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரைசனில் உள்ள ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிலர், ​​தங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் கேஜெட்களை ஒதுக்கி வைத்து, 24 மணிநேரம் "டிஜிட்டல் நோன்பு" கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?