அமைச்சர் ரோஜா Twitter
இந்தியா

ஆந்திரா : அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல்; டிரைவருக்கு தலையில் காயம் - என்ன நடந்தது?

Priyadharshini R

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவிற்கு ஆதரவாக ரோஜா உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் கலந்து கொண்ட பேரணி நேற்று நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு ரோஜா, ஜோகி ரமேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்தனர்.

அதே சமயத்தில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தில் மூன்று நாள் ஜனவாணி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையம் வர இருந்தார்.

அவரை வரவேற்பதற்காக 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் விமான நிலையத்தின் வெளியே கூடியிருந்த நிலையில் ரோஜா உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு அவர்களின் வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது . இதில் அமைச்சர் ரோஜாவின் ஓடுநர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு இருந்த காவல் துறையினர் அவர்களை தடுக்க முயற்சித்தனர்.

பின்னர் அமைச்சர்களின் மீதான தாக்குதல் தொடர்பாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?