மருமகனுக்கு 125 வகை உணவு விருந்து அளித்த அடடே மாமியார்  டிவிட்டர்
இந்தியா

'இன்னைக்கு ஒரு புடி' மருமகனுக்கு 125 வகை உணவு விருந்து அளித்த அடடே மாமியார்

Keerthanaa R

ஆந்திராவில், தனது வருங்கால மருமகனுக்காக 125 வகையான உணவுகளை சமைத்து விருந்து கொடுத்திருக்கிறார் மாமியார் ஒருவர்.

ஆந்திரா மாநிலம், விஜயநகரம் எஸ்.கோட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டித்தை சேர்ந்த நிஹாரிகா என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயம் ஆனது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நவராத்திரி பண்டிகைக்கு வருமாரு மாமியார் வீட்டிலிருந்து சைதன்யாவுக்கு அழைப்பு வந்துள்ளது. சைதன்யாவும் வீட்டிற்கு வர, அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டிற்கு வந்த மருமகனுக்காக 125 வகை உணவுகளை சமைத்து விருந்தை தயாரித்துள்ளார் மணப்பெண் நிஹாரிகாவின் தாயார். பலகாரங்கள், இனிப்புகள், பாரம்பரிய உணவு வகைகள் என அனைத்தும் அவருக்கு பரிமாறப்பட்டது.

ஆனால், அத்தனை உணவையும் சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்துவிட்டாராம் மாப்பிள்ளை சைதன்யா. பரிமாறப்பட்ட உணவில் பலவற்றின் பெயர் கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால், உணவு வகைகள் அனைத்தும் மிகுந்த சுவையுடன் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

தன் வருங்கால மருமகனுக்காக அதிசய விருந்தளித்த மாமியாரின் இந்த செயல் கவனத்தை பெற்றுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?