Spiritual Guru Twitter
இந்தியா

கொலையாளியை கண்டுபிடிக்க சாமியாரிடம் குறி கேட்ட காவல் அதிகாரி பணியிடை நீக்கம் | Viral Video

Priyadharshini R

கொலையாளியை கண்டுபிடிக்க சாமியார் ஒருவரிடம் காவல் அதிகாரி குறி கேட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானதால், அந்த ஏ.எஸ்.ஐ. (உதவி துணை ஆய்வாளர்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுலை 28-ம் தேதி ஒண்டா பூர்வா கிராமத்தில் 12 வயது சிறுமியின் உடல் கிணற்றில் கண்டெடுக்கப்படுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி கொலையில் எந்த துப்பும் கிடைக்காமல், காவல்துறை அதிகாரிகள் திணறியுள்ளனர்.

இச்சூழலில், வழக்கை விசாரித்து வந்த ஏ எஸ்.ஐ. அனில் சர்மா, அப்பகுதியில் பிரபலமான சாமியாரை சந்தித்து கொலையாளி குறித்து குறி பார்த்து சொல்லும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்த சாமியார் சிறுமியின் தாய் மாமன் தான் கொலைக்கு காரணம் என்று கூறியதாக தெரிகிறது. அதை கேட்ட சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில், சாமியார் செய்த சிறப்பு பூஜைகள்,அதில் ஏ எஸ்.ஐ. அனில் சர்மா பங்கேற்றது போன்ற காட்சிகளுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதையடுத்து அனில் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து சத்ரபூர் மாவட்ட எஸ்.பி. சச்சின் சர்மா உத்தரவிட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?