ஆம்பர் கோட்டை Twitter
இந்தியா

தாஜ்மஹால் தவிர இந்தியாவில் இருக்கும் 7 கட்டிடக்கலை அற்புதங்கள் பற்றி தெரியுமா?

Priyadharshini R

இந்தியா அதன் பல்வேறு கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல அதன் பல்வேறு விதமான கட்டிடக்கலைகளுக்கும் புகழ்பெற்றது.

தாஜ்மஹால் இதற்கு முக்கிய சான்றாக விளங்கினாலும், இந்தியாவில் இன்னும் சில சிறந்த கட்டிடக்கலை அற்புதங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் காணும் சில அற்புதமான கட்டிடக்கலை அதிசயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்

ஃபதேபூர் சிக்ரி

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஃபதேபூர் சிக்ரி தாஜ்மஹாலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. ஆக்ராவில் இருக்கும் இது 1571 ஆம் ஆண்டு முதல் 1585 ஆம் ஆண்டுவரை பேரரசின் தலைநகரமாகச் செயல்பட்டது.

பின்னர் கைவிடப்பட்டது, இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரவில்லை. எஞ்சியிருக்கும் அரண்மனையும், மசூதியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

தாமரை கோவில்

டெல்லியின் தாமரை கோவில் அதன் தனித்துவமான வடிவமைப்பிற்கு பிரபலமானது. இது அமைதி மற்றும் ஒற்றுமையின் சின்னமாகும். இந்த தாமரை கோயில் அனைத்து மதத்தினரும் ஒன்று கூடும் இடமாக உள்ளது.

இந்த கட்டிடத்தில் தாமரை இதழ் போன்ற வடிவத்தில் தனித்தனியாக நிற்கும் 27 வெண் பளிங்குக் கற்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஈரானிய - கனடிய கட்டிடக்கலைஞர் ஃபரிபோர்ஸ் சாபாவின் மிகவும் விரும்பப்பட்ட படைப்புகளில் இந்த கோயில் ஒன்றாகும்.

மெஹ்ரன்கர் கோட்டை

ராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்துள்ளது மெஹ்ரன்கர் கோட்டை. பெரும்பாலான கட்டமைப்புகள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

அதன் எல்லைகளுக்குள் பல அரண்மனைகள் அவற்றின் நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் பரந்து விரிந்த முற்றங்கள், பல்வேறு நினைவுச்சின்னங்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்

முன்பு விக்டோரியா டெர்மினஸ் என்று அழைக்கப்பட்டது. இது பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஃபிரடெரிக் வில்லியம் ஸ்டீவன்ஸால் வடிவமைக்கப்பட்டது. இத்தாலிய கோதிக் பாணியில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மராட்டியப் பேரரசின் முதல் சத்ரபதியான சிவாஜியின் பெயரால், விக்டோரியா டெர்மினஸ் நிலையத்தின் பெயர் ’சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்’ என மாற்றப்பட்து. இது இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

ஆம்பர் கோட்டை

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஆம்பர் கோட்டை ஒரு மலை உச்சியில் உள்ளது. ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களுக்கு வாழிடமாக இருந்தது.

மைசூர் அரண்மனை

மைசூர் அரண்மனை கர்நாடக மாநிலத்தின் பல முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இது இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

மைசூர் அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி ஹால்கள், மாட மாளிகை, கூடக் கோபுரங்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், லிஃப்ட் வசதி, வேட்டை அறை என பல வசதிகள் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?