Death Twitter
இந்தியா

சர்ப்ரைஸாக போன் வாங்கி கொடுத்த கணவர் - தற்கொலை செய்து கொண்ட மனைவி - நடந்தது என்ன?

Priyadharshini R

இன்ப அதிர்ச்சி கொடுக்க EMI-யில் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்த கணவர் மீது கோபமடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.

ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள கலிமேலா அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜோதி மண்டல் என்ற பெண் தனது கணவர் தனக்கு EMI-யில் தொலைபேசி வாங்கியதை அறிந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Odisha woman kills self after learning husband gifted her phone bought under EMI scheme

ஜோதி கடந்த ஆண்டு தான் கன்ஹேயை திருமணம் செய்து கொண்டார். ஆதாரங்களின்படி, கன்ஹேய் தனது மனைவிக்கு பரிசளிக்க ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினார்.

போனின் விலை அதிகமாக இருந்ததாலும், அதை ஒரேயடியாக செலுத்த முடியாததாலும், கன்ஹேய் EMI-யில் வாங்கியுள்ளார்.

ஜோதிக்கு இது தெரியாது. இறுதித் தவணைத் தொகையை அவரது கணவர் செலுத்தியவுடன், அந்த நிறுவன அதிகாரிகள் தம்பதியினரின் கையெழுத்து வாங்க சென்றனர்.

இதை அறிந்த ஜோதி, தான் பயன்படுத்திய போன் இஎம்ஐயில் வாங்கியதை கன்ஹேய் தன்னிடம் கூறாததால் கோபமடைந்தார்.

தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கணவன் முன்பு ஜோதி திடீரென விஷம் குடித்தார். இதைப் பார்த்த கன்ஹேய் அதிர்ச்சியில் தரையில் சரிந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு ஜோதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கன்ஹேய் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?