Dog Twitter
இந்தியா

தாயை கொன்ற பிட்புல் நாயை மீண்டும் வாங்கிக்கொண்ட உரிமையாளர் - என்ன நடந்தது?

Antony Ajay R

லக்னோவைச் சேர்ந்த அமித் த்ரிபதி என்பவர் ஒரு பிட்புல் வகை நாயை வளர்த்து வருகிறார்.

இந்த நாயானது சில நாட்களுக்கும் முன் அவரது 82 வயது தாய் சுசீலாவை தாக்கிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

பிட்புல் நாய்கள் இனத்தில் அதிக ஆக்ரோஷம் கொண்டதாகக் கருதப்படுகிறது. சில நாடுகளில் இதனை தடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் வளர்த்த ப்ரௌனி எனும் நாயை அவரது தாயார் தான் உணவு மற்றும் இதர பணிகளைச் செய்து பார்த்து வந்துள்ளார்.

கடந்த ஜூலை 12ம் தேதி அந்த நாயானது பால்கனியின் நின்றுகொண்டிருந்த சுசிலாவை கொன்றது. இது குறித்து அமித், "ப்ரௌனி வாசலில் காலிங் பெல் அடித்தால் ஆக்ரோஷமடையும் என்றார். நான் இல்லாத நேரத்தில் யாராவது காலிங் பெல் அடித்திருக்கலாம்" எனக் கூறியுள்ளார்.

அதன் பிறகு இரண்டு நாட்களில் நகர் நகிம் என்ற கால்நடை நல் வாழ்வு மையத்துக்கு ப்ரௌனி கொண்டு செல்லப்பட்டது. ப்ரௌனியை அதன் உரிமையாளர் கால்நடை வாகனத்தில் ஏற்றிவிடும் வீடியோ வைரலானது.

14 நாட்கள் அங்கு கண்காணிப்பில் இருந்த நாய் 29ம் தேதி அதன் உரிமையாளருடன் திருப்பி அனுப்பப்பட்டது.

கண்காணிப்பில் ப்ரௌனி சாதாரணமாக இருந்ததாகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்போது ப்ரௌனி அதன் உரிமையாளர் அமித்துடன் மீண்டும் இணைந்துள்ளது. ஆனால் இதற்காக பல விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அமித் இனி தினமும் ப்ரௌனியை ட்ரெயினிங்குக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?