Pvt hospital nurses help woman deliver baby on road in Greater Noida  Twitter
இந்தியா

உத்தரப் பிரதேசம்: கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையில் பிரசவம் பார்த்த செவிலியர்கள்!

Priyadharshini R

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் பிரசவ வலியால் துடித்த ரோஷினி என்பவருக்கு சாலையிலேயே இரண்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

நொய்டாவில் உள்ள பரி சௌக்கில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரசாந்த் சர்மா, பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை சாலையிலேயே படுக்கவைத்துவிட்டு பொதுமக்களிடம் உதவிக்கேட்டு போராடியுள்ளார்.

உதவிக்காக அவர் கூக்குரலிட்டதைக் கண்டு, அருகிலுள்ள சாரதா மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஜோதி மற்றும் ரேணு தேவி ஆகியோர் அவசர சிகிச்சை அளித்தனர்.

அவர்களின் உதவியுடன் அந்தப் பெண் சாலையோரமே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

"பிரசவத்திற்குப் பிறகு, நாங்கள் குழந்தையை அவரது தந்தையின் ஜாக்கெட்டில் போர்த்தி, ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்றோம் ”என்று அவர்கள் கூறினர்

சாரதா மருத்துவமனையின் மகளிர் மருத்துவ துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் ருச்சி ஸ்ரீவஸ்தவா, பிரசவத்திற்குப் பிறகு அந்த இரண்டு செவிலியர்களை மருத்துவமனைக்கு அழைத்து பாராட்டினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?