ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா? ட்விட்டர்
இந்தியா

ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா?

Keerthanaa R

அருணாச்சல பிரதேசத்தின் இந்த நகரத்தில் பின்பற்றப்படும் ஒரு சடங்கிற்கு ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் பின்பற்றப்படும் பல்வேறு மத சடங்குகளில் ஆண்கள் தான் முன் நின்று அதனை நடத்துகின்றனர். ஆங்காங்கே பெண்களை மையப்படுத்தும் சடங்குகள் இருந்தாலும், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் பெண்கள் ஒரு சடங்கை எடுத்து நடத்துகின்றனர்.

ஆனால் அருணாச்சல பிரதேசத்தின் லாங்டிங் என்ற இடத்தில் வசிக்கும் வான்சோ பழங்குடியின மக்கள் கொண்டாடும் தாஹ் தாவான் விழாவில் ஆண்களுக்கு அனுமதி இல்லை

கருவுறுதலையும் செழிப்பையும் கொண்டாடும் விழா தான் இந்த தாஹ் தாவான்.

தாஹ் என்றால் நெல், தா என்றால் ஆன்மா மற்றும் வான் என்றால் வருகை. புதிய ஒரு உயிரின் வருகையை குறிக்கிறது இந்த சடங்கு.

இந்த சடங்கை செய்து முடித்த பிறகு, பெண்கள் தங்களது வயல்களில் இருந்து கன்றுகளை எடுத்து வந்தனர். எடுத்துவரப்பட்ட கன்றுகளை தங்களின் வீடுகளின் முன்னால் கட்டி தொங்கவிடுகின்றனர். இது கருவுறுதலையும், செழிப்பையும் குறிப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

இந்த சடங்கிற்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆரம்ப காலத்தில் வயது வந்த பெண்கள் மட்டுமே பின்பற்றிவந்த இந்த சடங்கினை தற்போது அனைத்து வயதுடைய பெண்களும் பின்பற்றுகின்றனர். பாரம்பரிய ஆடைகள், நகைகள் அணிந்து தங்களை அலங்கரித்து கொள்கின்றனர்.

அதன் பிறகு அவர்களின் வயல்களுக்கு செல்கிறார்கள்

இங்குள்ள ஒவ்வொரு குலத்தினர் வீட்டிலும் ஒரு பண்ணை வீடு இருக்கும். இதனை இவர்கள் கேதி கர் என்று அழைக்கின்றனர்.

ஊர் பெண்கள் இந்த விழாவின் போது இந்த பண்ணை வீடுகளில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை சமைக்கின்றனர். மீன், பன்றிக்கறி, வயல்களில் சுற்றித்திரியும் எலிகள் கூட இதில் அடங்கும்.

இந்த உணவை சாப்பிடக் கூட ஆண்களுக்கு அனுமதியில்லை.

சமைத்த உணவை வயிறார சாப்பிட்ட பிறகு, அந்த ஆண்டு வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு அவர்கள் வழக்கமாக செய்யும் சடங்குகளை ஊரின் மூத்த வயது பெண்மணிகள் செய்கின்றனர்.

இவர்களுக்கு ஒரு வெள்ளை நிற பாவாடை வழங்குகின்றனர். இதனை அணிந்தால் அந்த பெண்கள் திருமணத்திற்கு தயார் என்று ஊருக்கு உரைப்பதாக கருதப்படுகிறது.

இந்த சடங்கு முடிந்ததும் பெண் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்படுகின்றனர். முன்பு, வயது வந்த பெண் வலுவான, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஒரு ஆண் வாரிசை குடும்பத்திற்கு பெற்று தர வேண்டும் என்று வாழ்த்தினர். ஆனால் காலம் மாறியதில், தற்போது, பிறக்கும் குழந்தைக்கு, அது ஆணோ பெண்ணோ, அவர்களுக்கு முறையான, சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்றே வாழ்த்துகின்றனர்

இவர்களின் வழக்கத்தில் ஒரு முறை ஒரு வயலில் சாகுபடி செய்து அறுவடை செய்துவிட்டால், அடுத்த 9 ஆண்டுகளுக்கு அந்த வயல் பயன்படுத்தக்கூடாது. இதுவும் அங்குள்ள பெண்களின் வயதுடன் தொடர்புடையதாக உள்ளது. உதாரணத்திற்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை அந்த வெள்ளை நிற ஆடையை அணிந்தால், இரண்டாவது முறையாக 18 வயதில் அணிவாள்.

இந்த சடங்குகள் எல்லாம் முடிவடைந்ததும், பெண்கள் அனைவரும் விளையாடி, பாடல்கள் பாடி, நடனமாடி, பழங்கதைகளை பேசி மகிழ்கின்றனர். இந்த சடங்கின்போது சாலையெங்கும் பெண்களே நிறைந்திருக்கின்றனர்.

அருணாச்சலத்தின் பல்வேறு கிராமங்களிலும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், சடங்குகளில் சிறு சிறு மாற்றங்கள் உள்ளன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?