பாம்பு கடித்த பிறகு என்னென்ன செய்யக் கூடாது? Canva
இந்தியா

பாம்பு கடித்த பிறகு என்னென்ன செய்யக் கூடாது?

Priyadharshini R

பாம்புக்கடியால் பலர் உயிரை இழக்கிறார்கள். பாம்பு பிடிக்கும் வல்லுனர்கள் இது குறித்து கூறுகையில், பாம்புகள் குறித்த விழிப்புணர்வும், பாம்பு கடியை எப்படி சமாளிப்பது என்பதும் அறியாததும் தான் உயிரிழப்புக்கு காரணம் என்கின்றனர்.

பாம்புகளில் விஷம், விஷமற்றது என இரண்டு வகை உண்டு. விஷமுள்ள பாம்புக்கடித்தால் சிவந்தல், வீக்கம், இரத்தப்போக்கு அல்லது கடித்த இடத்தில் கொப்புளங்கள் ஆகியவை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் முதலுதவி பற்றி ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.

ஒருவரை பாம்பு கடித்து சுவாசிப்பதில் சிரமம் அல்லது சுயநினைவு இழப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு முதலுதவி நிச்சயம் வேண்டும். விஷம் வேகமாகப் பரவாமல் இருக்க, பாதிக்கப்பட்டவர் தங்களைத் தாங்களே அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அவர்கள் அந்த காயத்தை கட்டுடன் மூட வேண்டும். பாம்பு கடிக்கப்பட்ட பகுதியிலிருந்து நகைகளை அகற்ற வேண்டும். காலில் கடித்திருந்தால் அவர்கள் காலணிகளை அகற்ற வேண்டும். பாம்பு கடித்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பாம்புக்கடியை கையாளும் போது ஒருவர், சில மிக முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அறிகுறிகள் தோன்றும் வரை அவர்கள் காத்திருக்கக்கூடாது, முடிந்தவரை விரைவாக மருத்துவ உதவியை கொடுக்க வேண்டும்.

காயத்திலிருந்து விஷத்தை உறிஞ்சி எடுக்க முயற்சிக்கக்கூடாது, காயத்தின் மீது பனிக்கட்டியைப் பயன்படுத்தவோ அல்லது தண்ணீரில் மூழ்கவோ கூடாது. வலி நிவாரணியாக மது அருந்துவது, இப்யூபுரூஃபன் போன்ற நிவாரணிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 5.4 மில்லியன் மக்கள் பாம்பு கடியால் பாதிக்கப்படுகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?